நெகிழியின் வகைகளும், பயன்களும் – ஓர் அலசல்

இயற்கையோடு இயைந்த வாழ்வால் வான்புகழ் கொண்டுத் திகழ்ந்தது நம் பண்டையத் தமிழர் இனமாகும். இங்கே உண்பதும், உடுத்துவதும், பக்தியும், பண்டிகையும், இறையும், இலக்கியமும், கலையும், கவிதையும், வீரமும், விளையாட்டும்  என்று யாவுமாகி நின்று அழகு செய்தவள் நம் இயற்கை அன்னையே! சங்க காலத்தில் மட்டுமல்ல. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய உங்கள் கிராமங்களை நினைத்துப் பாருங்கள்.

        பூவரசு இலைகளில் ‘பீப்பி’, நுங்கு கூந்தலில் தள்ளுவண்டி, பத்து பைசாவுக்கு பம்பர மிட்டாய், வயல் வரப்புகளில் ஓடிப்பிடித்து, வாழைத் தோப்புகளில் திருடன்-போலிஸ் என்று அங்கே விளையாட்டுக்கு கூட இயற்கை இல்லாமலில்லை. பிறந்த குழந்தையின் தொட்டிலிருந்து கடைசியில் கிடத்தும் கட்டில் வரையிலும் இயற்கை என்றிருந்த நிலை மாறி இன்று எங்கும் பிளாஸ்டிக்! எதிலும் பிளாஸ்டிக்! என்றாகிவிட்டது. விலையோ குறைவு. உற்பத்தி செய்வது எளிது. இன்றைய உலகின் அன்றாடத் தேவையை ஈடுசெய்ய இதற்கு மாற்று எதுவுமில்லாத சூழலில் எங்ஙனம் பிளாஸ்டிக் இயற்கையின் பகைவன் ஆனது என்பதையும், இத்தகைய பிளாஸ்டிக் மற்றும் பயன்படுத்தப்பட்ட டயர்களை எரிப்பது இயற்கைச் சூழலை எங்ஙனம் பாதிக்கின்றது என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.

நெகிழியின் பிறப்பு

     தமிழில் நெகிழி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் என்பது ‘பிளாஸ்டிக்கோஸ்’ என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது. வார்க்கத் தக்க அல்லது பிசைவு கொள்ளத் தக்கப் பொருள் என்று இதனை வரையறுக்கலாம். தொடக்கக் காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடுகள், சில வண்டு, பூச்சிகளில் இருந்து ‘செராடின்’ என்ற நெகிழியானது செய்யப்பட்டன. பின்னர் எவ்வாறு பிளாஸ்டிக்கானது முழுக்க முழுக்க செயற்கை வேதி மூலங்களிலிருந்து தயாரிகக்கப்படுகின்றன என்பதை கீழ்வரும் காலக்கோடு மூலம் அறிந்து கொள்ளமுடியும்.

  • பிளாஸ்டிக் முதன் முதலில் 1862 -ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் ‘பார்க்ஸ்டைன்’ என்ற பெயரிட்டார். 
  • பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 -ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற பிளாஸ்டிக் உருவானது. 
  • 1907-ல் லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், டுபாண்ட் என்னும் அமெரிக்க நிறுவணம் வெடி பொருள் பிளாஸ்டிக்; தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது.  
  • 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.

நெகிழியின் வகைகளும், பயன்களும்

வெப்பத்தால் எற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழிகளில் இரு பிரிவுகள் உண்டு. அவை முறையே இளகும் வகை, இறுகும் வகை என்பனவாகும்.

1.வெப்பத்தால் இளகி, குளிர்வித்தால் இறுகி பின் எத்துனை முறையும் இவ்வாறு மாற்றி மாற்றி செய்யமுடியக்கூடிய நெகிழி இளகும் வகை நெகிழி ஆகும். இவை மறு சுழற்சி செய்யக் கூடியவை. அவற்றின்  பெயர்களையும், பயன்பாடுகளையும் இங்கே காண்போம்.

  • செல்லுலாயிட்: எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள், தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.
  • பாலி புரோப்பிலின்:  கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், ஆரோக்கியப் பொருள்கள், குப்பிகள் ஆகியவை செய்யவும், இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள்,கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன.
  • பாலிவினைல் குளோரைடு:  மணமற்ற நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் இன்சுலேட்டர்கள், நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.
  • பாலிவினைல் அசிட்டேட்:  வண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் ஆகியவை பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • வினைல் : டெரிலின் இழை போலவே இதில் இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்காது. தூசி படியாது. அழுக்கை எளிதில் நீக்கலாம். வண்ணமேற்றலாம். இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள்.
  • அக்ரிலிக்: நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள் செய்யவும் பல்வேறு சாதனங்களிலும் பயன்படுகிறது. இதனை நாம் மீன் தொட்டி செய்ய பயன் படுத்தலாம்
  • செல்லுலோஸ் அசிட்டேன்: இதனுடன் வண்ணம் சேர்த்து பெருமளவில் மோட்டார் தொழிலில் தேவையான பல பொருள்களைச் செய்கின்றனர்.
  • ஈதைல் செல்லுலோஸ்: பொருள்கள் மீது மேல் பூச்சு அமைக்கவும், புகைப்படத் தகடுகள் செய்யவும் பயன்படுகிறது. 

2.இளக்கிப் பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழி இறுகும் நெகிழி ஆகும். இது எளிதில் நொறுங்கக் கூடியது. இது இளகும் வகையை விட தரம் குறைந்தவையாகக் கருதப் படுகின்றன. அவற்றின் சில எடுத்துக்காட்டுக்களை கீழே காண்போம்.

  • ஆல்கைடு ரெசின் : பொருள் வெப்பம், ஈரத்தால் பாதிக்கப்படாதது. மின்சாரம் கடத்தாது. உறுதியானது. கடினமானது. ஒளி புகும். எனவே விமானம், மொட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், தண்டுகள், இன்சுலேட்டர்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
  • மெலமின் ரெசின் : இது எளிதில் தேயாது மின்சாதன பாகங்கள் (குறிப்பாக மின்விசிறி) செய்யப் பயன்படுகிறது.
  • பீனாலிக் ரெசின் : மலிவு விலை மின்சுவிச்சுகள், பலகைகள், தொலைபேசிகள் செய்யப் பயன்படுகின்றது.

இவ்வாறு விலை மிகவும் மலிவாகவும், அனைவரையும் கவரும் பல வகை நிறங்களிலும், காற்று, நீர், ஈரம் இவற்றால் பாதிக்கப் படாமலும், மின்கசிவு ஏற்படாமலும் இருப்பதால் நெகழியானது நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன.

நெகிழியின் தீமைகள் – ஓர் அலசல்

நாம்  அனைவருமே ஏற்கனவே அறிந்ததுதான். நெகிழிப் பொருள்கள் எளிதில் அழிவதில்லை. சராசரியாக ஒரு பாலித்தீன் பையின் பயன்பாட்டுக் காலம் 12 முதல் 20 நிமிடங்களே என்றும் அவை அழிய 1000 ஆண்டுகளுக்கும் அதிக காலம் பிடிக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. பயன்பாடற்ற ஒரு நச்சுவேதிப் பொருளின் நெடிய ஆயுட்காலம் என்பது இயற்கையின் நியதிக்கு மிகமிக ஆபத்தான முரண்பாடாகும். அதிலும் நெகிழியின் அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக இவை கற்பனைக்கெட்டாத அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளையும், மானுடரல்லாத பிற உயிர்களையும், இயற்கைச் சூழலையும் பற்றிய அக்கறையற்ற சுயநலமே இன்றைய நிலையாக இருக்கின்றது. மறுசுழற்சி என்பதும் பெரிதும் பயன்தரப் போவதில்லை. ஏனென்றால் நெகிழிப் பொருட்களில் 10 சதவீதப் பொருள்களே மீண்டும் பயன்படுத்தத் தக்கவையாக இருக்கின்றன. மற்ற 90 சதவீதப் பொருட்களும் வீணே எரிக்கப்பட்டுவிடுகின்றன. ‘இன்சினரேசன்’ என்னும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன.

  • தொழிற்சாலைகளில் இவை மறு சுழற்சி செய்யப்படும் போதும், எரிக்கப்படும் போதும்  வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதாக இருப்பதால், அருகிலுள்ள மக்களின் உடல்நலனாது பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. தோல்நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • பாலித்தீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. நிலத்தடி நீர் பெருகுவதைத் தடுக்கின்றன.
  • மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பைகளைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.
  • மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
  • கடலில் எறியப்படும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும்பாதிக்கின்றன

    வாகனப் பெருக்கம் நாம் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத அளவிற்கு அதிகரித்துவிட்டது. மக்கள் கல்வி, பணி நிமித்தமாக தினசரி பயணிக்க வேண்டியத் தேவையும், தரமில்லாத பொதுப் போக்குவரத்துச் சேவையும் தனியார் வாகனப் பெருக்கத்தை இன்றியமையாததாகச் செய்துவிடுகின்றன. தமிழகம் முழுவதும் 70 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 100 வாகனங்கள் என வைத்தால், ஒரு நாளைக்கு 7 ஆயிரம் புதிய வாகனங்கள். 20 வேலை நாள்கள் என கணக்கிட்டால் கூட, ஒரு மாதத்தில் 1,40,000 புதிய வாகனங்கள் தமிழகச் சாலைகளில் உலா வரத் துவங்குகின்றன. வாகனப் பெருக்கத்தின் விளைவாக காற்று மாசுபடுவதோடு, புவி வெப்பம் அதிகரிப்பதோடு, இன்னொரு தலைவலியாக பயன்படுத்தப்பட்ட டயர்கள் ஒவ்வொரு நாளும் மலை போலக் குவிந்து விடுகின்றன.

    டயர்களும் இயல்பிலேயே அழிவதற்கு நிறைய காலம் எடுத்துக் கொள்கின்றன. அத்தோடு மறுசுழற்சியும் பெரிய பயன்தருவதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் மாசு என்னும் தீய விளைவையேக் கொண்டிருக்கின்றன. டயர்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் துத்தநாகம், குரோமியம், ஈயம், செம்பு, கேட்மியம் மற்றும் சல்பர் போன்ற வேதிப் பொருள்கள் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தவையாகும். இவை எரிக்கப்படும்போது காற்று மாசுபடுவதால் தோல் நோய்கள், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுக் காரணமாகின்றன.

    பழைய டயர்கள் பெரும்பாலும் காகிதம், சிமென்ட் போன்ற தொழிற்சாலைகளில் மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகின்றன. போகி, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதும், கிளர்ச்சி போராட்டங்களின் போது தங்கள் எதிர்ப்பைக் காட்டவும் எரிக்கப்படும் டயர்கள் சுற்றுச்சூழலைப் மிகவும் மாசுபடுத்துகின்றன. பூமியில் புதைக்கப்படும் டயர்கள் நாளடைவில் பல்வேறு ரசாயனங்களை வெளியிடுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, மண்வளத்தையும் கெடுத்துவிடுகின்றன.

பிளாஸ்டிக் பொருள்களை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம்??எப்படி செய்யலாம் ??

நம் சமூகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தற்போது கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பைகள் இல்லாமல் இன்று எந்த மூலை முடுக்கிலும் வர்த்தகம் நடைபெறுவதில்லை. அன்றாடம் வீடுகளில் சேரும் கழிவு மற்றும் குப்பைகளில் பிளாஸ்டிக்கின் பங்கு சரிபாதியாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக வெப்பமயம் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ள இந்த சூழ்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    மனித சமூகத்தால் அன்றாடம் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனோ-ஆக்சைடு, குளோரோ ஃப்ளோரோ கார்பன் போன்றவை வளிமண்டலத்தை அதிக அளவு மாசுபடுத்துகிறது. பிளாஸ்டிக் சார்ந்த கழிவுப் பொருள்களும் குப்பைகளும் கூட இதற்கு காரணமாக அமைகிறது.



இந்த நச்சு வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் புவி வெப்பம் அடைந்து எதிர்காலத்தில் பனிமலைகள் உருகி கடற்கரை ஓர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது புவி வெப்பம் அடைவதால் நமது எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக பிளாஸ்டிக் பொருள்களையும், பிளாஸ்டிக் குப்பைகளையும், பிளாஸ்டிக் உறைகளையும் மக்கள் எளிதாகக் கையாள்கின்றனர். சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் அளவு 1.86 லட்சம் கிலோவாகும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் தினமும் வெளியேற்றப்படும் அல்லது பொதுமக்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 250 டன் வரை என்பதைக் கேட்கும் போது நெஞ்சு வெடிக்கிறது.

ஒரு பிளாஸ்டிக் பொருள் மட்குவதற்கு ஆகும் காலம் 100 ஆண்டு முதல் 1,000 ஆண்டு வரை ஆகும். ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள்.
வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப பொருள்கள், தொலைதொடர்பு சாதனப் பொருள்கள், கணினி பாகங்கள் போன்றவை அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன. இப்பொழுது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புகளும், தடைகளும், அதிகரித்து வருகிறது. சுற்றுச் சூழல் வல்லுநர்களும் இயற்கை ஆர்வலர்களும் பிளாஸ்டிக்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும், தீமைகளையும், பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


ரொட்டி உறை, மிட்டாய் உறை, சாக்லெட் உறை, பேனாக்கள், எண்ணெய் பொருள்கள், கயிறுகள், டப்பாக்கள், டின்கள், மசாலை பொருள்கள், விளம்பரப் பதாகைகள் போன்றவை பிளாஸ்டிக்கினால் தயாரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு அட்டை, அலுமினியப் பொருள்களால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ. 100-ககும் மேல் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே வணிக நோக்கில் தயாரிக்க அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும். உணவு நிறுவனங்கள், உணவகங்கள், பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்த்து அட்டை, அலுமினிய, சணல் பைகளையும் வாழை இலை முதலியவற்றையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தீர்மானம்நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து கண்ணாடி பாட்டில்கள், உலோபக பாட்டில்கள், மற்றும் அலுமினியப் பாட்டில்களையும் பயன்படுத்த நிறுவனங்களும், பொதுமக்களும் முன்வர வேண்டும்.


விழிப்புணர்வுக் கூட்டம், கருத்தரங்கு, போராட்டத்தினால் மட்டுமே பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்துவிட முடியாது. அரசு கடுமையான டச்டம் இயற்றுவதன் மூலமும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு மூலமும் மட்டுமே பிளாஸ்டிக் பொருள்களையும் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளையும் நமது தேசம் முழுவதும் ஒழக்க முடியும். மாசு இல்லாத தேசமாக, உலக நாடுகளுக்கு முன்னோடியாக, விழித்த தேசமாய் எழுந்து நிற்போம்.

நெகிழி மாசு என்றால் என்ன?

உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் குப்பைகளின் அளவும் அதற்கேற்றால்போல் அதிகரிக்கிறது. நவீன வாழ்க்கைமுறை மக்களை இலகுவாக தூக்கி எறியக்கூடிய பொருள்களான தண்ணீர் மற்றும் குளிர்பான குடுவைகள் ஆகியவற்றை அதிக அளவில் குப்பைகளாக உற்பத்தி செய்கின்றது. இதன்மூலம் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடுத்தப்படுகிறது. நெகிழியில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதால் இதன்மூலம் காற்று, நீர் மற்றும் நிலம் அதிக மாசடைகிறது.

அதிக அளவில் நெகிழிக்கழிவுகள் குறிப்பிட்ட இடத்தில் சேர்வது சுற்றுச்சூழலையும் , தாவரங்களையும் , வனவிலங்குகளையும் மற்றும் பொது மக்களையும் அதிக பாதிப்பிற்குள்ளாக்குகிறது. நெகிழியின் பயன்பாடு அதன்நீண்ட நாள் பயன்பாட்டிற்கு வழிவகுத்தாலும், அது எளிதில் மக்குவதில்லை.

நெகிழி மாசின் காரணங்கள்

நெகிழியினால் ஏற்படும் பிரச்சனைகள் வெறும் குடுவைகளை சுத்தம் செய்து மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதால் மட்டும் தீர்வாகாது. அது சூழ்நிலைக்கு ஏற்ப வடிவெடுக்கிறது.

பழமையான குப்பைசேகரிக்கும் கிடங்கு

நெகிழிகள் எல்லாஇடத்திலும் பரவலாக காணப்படுகிறது. வெறும் தண்ணீர் குடுவைகளும் மற்றும் பால் கொண்டு செல்ல பயன்படும்நெகிழி பைகள் கூட சிறிய அளவில் சூழல் மாறுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. குப்பை கிடங்குகள் மற்றும் குப்பைகளால் ஆன நில மூடல்கள் பெரிய அளவில் வனவிலங்குகளுக்கும் , நிலத்திற்கும் மற்றும் நிலத்தடிநீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

அதிக பயன்பாடு

நெகிழிகள் சந்தைகளில் மலிவாக கிடைப்பதால் அவைஅதீத அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது. முறையாக அப்புறப்படுத்தாத நெகிழிகள் நிலத்தை மாசுபடுத்துவதும், எறியூட்டப்படும்போது காற்றை மாசுப்படுத்துவதும் நடைமுறை சிரமங்கள்.

மீன்பிடி வலைகள்

உலகெங்கும் மீனை உணவாக எடுத்துக் கொள்ளும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் மீன்பிடி தொழில் பரவலாக செய்யப்படும் பிரதான தொழில். மேற்படி தொழிலுக்கு நெகிழிகளால் ஆன வலைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அதிக ஆண்டுகள் அவை உழைத்தாலும் அவைகளின் நச்சுத்தன்மையால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் மற்றும் கடல்சார் சூழலுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.

நெகிழிகள் மற்றும் பிற குப்பைகளை அப்புறப்படுத்துதல்

நெகிழியின் ஆயுட்காலம் அதிக ஆண்டுகள் என்பதால் அவை மக்குவதற்கு நீண்ட காலம் ஆகிறது. அதனைமண்ணில் புதைத்தாலும் அதன் நச்சுத்தன்மை மாறுவதில்லை. அதேபோல் மறுசூழற்சி செய்தாலும் நச்சுத்தன்மை குறைவதில்லை.

இந்தியாவின் பிளாஸ்டிக் பிரச்சினை எவ்வளவு மோசமானது?

ஒரு ஏக்கர் பரப்பளவில் ஒரு அதிகாரப்பூர்வமற்ற
நிலப்பரப்பு மற்றும் பல மீட்டர் உயரத்திற்கு
உயர்ந்துள்ளது, அதன் அடித்தளம் சமீபத்தில்
நிராகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கப், பாலிபேக்குகள்,
ரேப்பர்கள், பேக்கேஜிங் நமது அன்றாட
வாழ்க்கையின் பொருள் மற்றும் பிற தீங்கு.

இந்த பிளாஸ்டிக் குவியல், எங்கள்
சாலையோரங்களில் கிடக்கும் அல்லது வெற்று
இடங்களில் குவிந்து கிடப்பது அல்லது
நீர்நிலைகளை மூச்சுத்திணறச் செய்வது போன்ற
ஒற்றை குவியல்களைப் போலவே, ஒற்றை-
பயன்பாட்டுத் தளத்தை கட்டுவதற்கான
இந்தியாவின் லட்சிய நோக்கத்தில் அதன்
மூக்கைத் தட்டுகிறது,

ஒரு நபருக்கு அதிக பிளாஸ்டிக்
உலகின் பெரும்பகுதியைப் போலவே,
இந்தியாவும் அதன் வளர்ந்து வரும் பிளாஸ்டிக்
கழிவுகளை எவ்வளவு எங்கும் பரவியுள்ள
நிலையில் – நமது பல் தூரிகைகள் முதல் டெபிட்
கார்டுகள் வரை அப்புறப்படுத்த போராடுகிறது. 2012
ல் இருந்து ஒரு சிபிசிபி மதிப்பீட்டின்படி, இந்தியா
ஒரு நாளைக்கு 26,000 டன் பிளாஸ்டிக் உற்பத்தி
செய்கிறது. மோசமான விஷயம் என்னவென்றால்,
ஒரு நாளைக்கு 10,000 டன்களுக்கு மேல்
பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் உள்ளன.

ஆனால் இந்தியாவின் அமைப்புகள் மற்றும்
செயல்முறைகள் நம் பாதுகாப்பைக் குறைக்க
முடியாது. மேலும், நாடுகள் இதைப் பற்றி
போட்டியிடக் கூடாது, நாங்கள் அதிகம்
உட்கொள்வதில்லை என்று கூறி, அதிக
[பிளாஸ்டிக்] நுகர்வுக்கு எங்களுக்கு சில
வழிகளைக் கொடுங்கள் ”என்று பெங்களூருவைச்
சேர்ந்த கழிவு மேலாண்மை சமூக நிறுவனமான
சஹாஸ் ஜீரோ வேஸ்ட்டின் நிறுவனர் மற்றும்
தலைமை நிர்வாக அதிகாரி வில்மா ரோட்ரிக்ஸ்
கூறுகிறார் .

எங்கள் பிளாஸ்டிக் நுகர்வு அதிகரித்து வருகிறது.
பிளாஸ்டிக் பதப்படுத்தும் தொழில் 2020 ஆம்
ஆண்டில் 13.4 எம் முதல் ஆண்டுக்கு 22
மில்லியன் டன் (எம்டி) ஆக உயரும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது.

இணைய டெலிவரி சிக்கல் பாரம்பரிய
சில்லறை
நாம் உட்கொள்ளும் பிளாஸ்டிக் தவிர,
ஆன்லைன் சில்லறை மற்றும் உணவு விநியோக
பயன்பாடுகளின் புகழ், பெரிய நகரங்களுக்கு
மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பிளாஸ்டிக்
கழிவுகள் அதிகரிப்பதற்கு பங்களிப்பு செய்கிறது
என்று கழிவு மேலாண்மை நிபுணர்கள்
கூறுகின்றனர். “இது குறித்து இதுவரை எந்த
தரவும் இல்லை, ஆனால் ஒவ்வொரு உணவு
வரிசையிலும் உருவாக்கப்படும் பேக்கேஜிங்
மிகப்பெரியது, இந்த பயன்பாடுகளை கருத்தில்
கொண்டு ஒரு குலாப் ஜமுனை கூட ஆர்டர்
செய்ய அனுமதிக்கிறது” என்று முனியின் திட்ட
மேலாளர் சுவாதி சிங் சம்பியால் கூறுகிறார் .

1998 ஆம் ஆண்டு வரை பிளாஸ்டிக் பைகளை
தடை செய்வதில் சிக்கிம் ஒரு முன்னோடியாக
இருந்தார். மற்றவர்கள் பின்பற்றினர், இதுவரை 22
மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்கள் தடை
செய்யப்பட்டுள்ளன என்று நிகாம் கூறுகிறார்.
“ஆனால் தடையை அறிவிப்பது வெறுமனே
பிளாஸ்டிக் அகற்றும் சிக்கலை தீர்க்காது. இது
எல்லா இடங்களிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்,
கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு
கண்காணிக்கப்பட வேண்டும். ”பயனற்ற
கண்காணிப்பு காரணமாக,“ எல்லோரும் விதிகளை
மீறுகிறார்கள், எனவே தடை இந்த நோக்கத்தை
நிறைவேற்றாது ”என்று சாஹாஸின் ரோட்ரிக்ஸ்
கூறுகிறார்.

பிளாஸ்டிக் குப்பைகளால் அழியும் நண்டுகள் தீருமா இந்த நிலை ??

பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதால்இந்திய தொலைதூர தீவுகளில்
பிளாஸ்டிக் மாசுபாட்டால் அரை மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட்
நண்டுகள் கொல்லப்பட்டுள்ளன.என்று டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின்
புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள கோகோஸ் (கீலிங்) தீவுகளில் சுமார் 508,000வும்,
பசிபிக் நாட்டின் ஹென்டர்சன் தீவில் சுமார் 61,000 நண்டுகள் பிளாஸ்டிக்
பாட்டில்கள் போன்ற குப்பைகளில் சிக்கிய பின்னர் கொல்லப்பட்டதாக ஆராய்ச்சி
குழுக்கள் மதிப்பிட்டுள்ளன, இது ஆபத்தான விசயமாக ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்தனர்.

ஹெர்மிட் நண்டுகளுக்கு அவற்றின் சொந்த ஒடுகள் இல்லை மற்றும் வெற்று
ஒடுகள் அல்லது வேறு பொருட்களை ஒரு பாதுகாப்பாக பயன்படுத்துகின்றன.

டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் கடல் மற்றும் அண்டார்டிக் ஆய்வுகள்
நிறுவனம் (ஐ.எம்.ஏ.எஸ்) தலைமையில் “பிளாஸ்டிக் குப்பைகளில்
என்ட்ராப்மென்ட் ஹெர்மிட் நண்டுகளுக்கு ஆபத்தை விளைவிக்கிறது” என்ற
ஆய்வு, அபாயகரமான பொருட்களின் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.

பானம் மற்றும் தொழில்துறை பாட்டில்கள் போன்ற பிளாஸ்டிக் கொள்கலன்கள்
நண்டுகளுக்குள் நுழைந்தன, அவை இறுதியில் மரணத்திற்கு வழிவகுத்தன.

“ஆய்வாளர்கள் தீவுகளில் குப்பைகளை ஆய்வு செய்தபோது, எத்தனை திறந்த
பிளாஸ்டிக் கொள்கலன்களில் இறந்துபோன மற்றும் உயிருடன் இருக்கும்

ஹெர்மிட் நண்டுகள் இருந்தன,” என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய டாக்டர்
ஜெனிபர் லாவர்ஸ் மேற்கோளிட்டுள்ளார்.

“ஒட்டுமொத்த ஹெர்மிட் நண்டு என்ட்ராப்மென்ட் விகிதங்கள் ஹென்டர்சன்
மற்றும் கோகோஸ் இரண்டிலும் மிக அதிகமாக இருந்தன, கிட்டத்தட்ட 61,000 (2.447
நண்டுகள் / மீ 2) மற்றும் 508,000 நண்டுகள் (1.117 நண்டுகள் / மீ 2) முறையே செத்து
கிடந்தன. ஹென்டர்சனில் ஒட்டுமொத்த இறப்பு குறைவாக இருந்தாலும்,
கடற்கரை பகுதி கோகோஸை விட மிகச் சிறியது, மேலும் என்ட்ராப்மென்ட்
மற்றும் இறப்பு விகிதமும் தீவிரமும் இரண்டும் மிக அதிகம் என்று ஆய்வு
தெரிவித்துள்ளது.

உலக அளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டால் நண்டுகள் இறப்பது சுற்றுச்சூழல்
அமைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அது கூறியது.

“வெப்பமண்டல சூழல்களின் ஆரோக்கியத்தில் ஹெர்மிட் நண்டுகள் ஒரு முக்கிய
பங்கைக் கொண்டுள்ளன, மேலும் மண்ணை காற்றோட்டம் மற்றும் உரமிடுதல்,
விதைகளை சிதறடிப்பது மற்றும் தீங்கு விளைவித்தல் ஆகியவற்றை அகற்றுதல்,
அத்துடன் கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய பகுதியாக இருப்பது
போன்றவை. அவற்றின் மக்கள்தொகை சரிவு இயற்கை சூழலுக்கு ஒரு ஆபத்தை
விட அதிகம் , “என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுசுழற்சி செஞ்சா பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்கலாமா???

இங்கிலாந்தின் பிளைமவுத் நகரிலிருந்து வட அமெரிக்காவிற்கு பயணிகள்
பயணித்தபோது பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால்-மேஃப்ளவர் பாட்டில்
தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் கவர் செய்யப்பட்ட தின்பண்டங்களுடன் சேமித்து
வைக்கப்பட்டிருந்தால் அவற்றின் பிளாஸ்டிக் குப்பை இன்னும் நான்கு
நூற்றாண்டுகள் கழித்து இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் இன்று பலரைப் போல இருந்திருந்தால், அவர்களின் வெற்று
பாட்டில்கள் மற்றும் ரேப்பர்களை பக்கவாட்டில் தூக்கி எறிந்திருந்தால்,
அட்லாண்டிக் அலைகள் மற்றும் சூரிய ஒளி ஆகியவை அந்த பிளாஸ்டிக்
அனைத்தையும் சிறியதாக மிதந்திருக்கும். அவை இன்றும் உலகப்
பெருங்கடல்களில் மிதந்து கொண்டிருக்கலாம், அவற்றில் ஏற்கனவே
உள்ளவற்றைச் சேர்க்க நச்சுகளைத் தூண்டுகின்றன, சில ற மீன் அல்லது சிப்பி
சாப்பிடக் காத்திருக்கின்றன, இறுதியில் நம்மில் ஒருவரால்.
யாத்ரீகர்களிடம் பிளாஸ்டிக் இல்லை என்பதற்கு நாங்கள் நன்றி சொல்ல
வேண்டும், சமீபத்தில் இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் பிளைமவுத்துக்கு ஒரு
ரயிலில் சென்றபோது நினைத்தோம்.
பங்களாதேஷியின் பங்கு
பங்களாதேஷின் டாக்காவில் உள்ள புரிகங்கா ஆற்றில் தெளிவான பிளாஸ்டிக்
குப்பைத் தாள்கள் கழுவப்பட்ட பின்னர், நூர்ஜஹான் அவற்றை உலர பரப்பி,
தொடர்ந்து திருப்பி விடுகிறார் – அதே நேரத்தில் அவரது மகன் மோமோவையும்
கவனித்துக்கொள்கிறார். பிளாஸ்டிக் இறுதியில் மறுசுழற்சிக்கு விற்கப்படும்.
அனைத்து பிளாஸ்டிக்கிலும் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானது உலகளவில்
மறுசுழற்சி செய்யப்படுகிறது. யு.எஸ் இல் இது 10 சதவீதத்திற்கும் குறைவாகவே
உள்ளது.
பங்களாதேஷின் டாக்காவில் உள்ள புரிகங்கா ஆற்றில் தெளிவான பிளாஸ்டிக்
குப்பைத் தாள்கள் கழுவப்பட்ட பின்னர், நூர்ஜஹான் அவற்றை உலர பரப்பி,
தொடர்ந்து திருப்பி விடுகிறார் – அதே நேரத்தில் அவரது மகன் மோமோவையும்
கவனித்துக்கொள்கிறார். பிளாஸ்டிக் இறுதியில் மறுசுழற்சிக்கு விற்கப்படும்.
அனைத்து பிளாஸ்டிக்கிலும் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானது உலகளவில்
மறுசுழற்சி செய்யப்படுகிறது. யு.எஸ் இல் இது 10 சதவீதத்திற்கும் குறைவாகவே
உள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்படவில்லை
என்பதாலும், 1950 ஆம் ஆண்டில் மட்டுமே உற்பத்தி தொடங்கியதாலும், சமாளிக்க
வெறும் 9.2 பில்லியன் டன் பொருட்கள் எங்களிடம் உள்ளன. அதில், 6.9

பில்லியனுக்கும் அதிகமான டன்கள் வீணாகிவிட்டன. அந்த கழிவுகளில், ஒரு
மகத்தான 6.3 பில்லியன் டன் அதை மறுசுழற்சி தொட்டியில் சேர்க்கவில்லை.
பூமியின் கடைசி மடு, கடலில் மறுசுழற்சி செய்யப்படாத பிளாஸ்டிக் கழிவுகள்
முடிவடைகின்றன என்பது யாருக்கும் தெரியாது. 2015 ஆம் ஆண்டில், ஜார்ஜியா
பல்கலைக்கழக பொறியியல் பேராசிரியரான ஜென்னா ஜம்பெக் அனைவரின்
கவனத்தையும் ஒரு தோராயமான மதிப்பீட்டில் ஈர்த்தார்: ஒவ்வொரு ஆண்டும்
கடலோரப் பகுதிகளிலிருந்து 5.3 மில்லியன் முதல் 14 மில்லியன் டன் வரை.
அவற்றில் பெரும்பாலானவை கப்பல்களில் இருந்து தூக்கி எறியப்படவில்லை, ,
ஆனால் நிலத்திலோ அல்லது ஆறுகளிலோ கவனக்குறைவாக
கொட்டப்படுகிறார்கள், பெரும்பாலும் ஆசியாவில். அது பின்னர் கடலில்
தள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பப்பட்ட ஐந்து பிளாஸ்டிக்
மளிகைப் பைகளை கற்பனை செய்து பாருங்கள், உலகெங்கிலும் உள்ள
கடற்கரையின் ஒவ்வொரு அடியிலும் உட்கார்ந்திருப்பதாக ஜம்பெக் கூறுகிறார் –
இது சுமார் 8.8 மில்லியன் டன்களுக்கு ஒத்ததாக இருக்கும், ஆண்டுதோறும் கடல்
நம்மிடம் இருந்து என்ன பெறுகிறது என்பதற்கான அவரது சாலை மதிப்பீடு. அந்த
பிளாஸ்டிக் அதன் தொகுதி மூலக்கூறுகளில் முழுமையாக மக்கும் தன்மைக்கு
எவ்வளவு காலம் ஆகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மதிப்பீடுகள் 450
ஆண்டுகள் முதல் ஒருபோதும் இல்லை.

மத்திய மாட்ரிட்டில் உள்ள நகர மண்டபத்திற்கு வெளியே சிபில்ஸ் நீரூற்றை
பிளாஸ்டிக் பாட்டில்கள் மூச்சுத் திணறின. லுசின்டெரப்டஸ் என்று
அழைக்கப்படும் ஒரு கலைக் கூட்டு, இதையும் மற்ற இரண்டு மாட்ரிட்
நீரூற்றுகளையும் 60,000 அப்புறப்படுத்தப்பட்ட பாட்டில்களுடன் கடந்த
இலையுதிர்காலத்தில் செலவழிப்பு பிளாஸ்டிக்குகளின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு
கவனம் செலுத்துவதற்கான ஒரு வழியாக நிரப்பியது.

பூமியின் கடைசி மடு, கடலில் எவ்வளவு மறுசுழற்சி செய்யப்படாத பிளாஸ்டிக்
கழிவுகள் முடிவடைகின்றன என்பது யாருக்கும் தெரியாது. 2015 ஆம் ஆண்டில்,
ஜார்ஜியா பல்கலைக்கழக பொறியியல் பேராசிரியரான ஜென்னா ஜம்பெக்
அனைவரின் கவனத்தையும் ஒரு தோராயமான மதிப்பீட்டில் ஈர்த்தார்: ஒவ்வொரு
ஆண்டும் கடலோரப் பகுதிகளிலிருந்து 5.3 மில்லியன் முதல் 14 மில்லியன் டன்
வரை. அவற்றில் பெரும்பாலானவை கப்பல்களில் இருந்து தூக்கி
எறியப்படவில்லை, அவளும் அவளுடைய சகாக்களும் கூறுகிறார்கள், ஆனால்
நிலத்திலோ அல்லது ஆறுகளிலோ கவனக்குறைவாக கொட்டப்படுகிறார்கள்,
பெரும்பாலும் ஆசியாவில். அது பின்னர் கடலில் ஊதப்படுகிறது அல்லது
கழுவப்படுகிறது. பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பப்பட்ட ஐந்து பிளாஸ்டிக்
மளிகைப் பைகளை கற்பனை செய்து பாருங்கள், உலகெங்கிலும் உள்ள
கடற்கரையின் ஒவ்வொரு அடியிலும் உட்கார்ந்திருப்பதாக ஜம்பெக் கூறுகிறார் –
இது சுமார் 8.8 மில்லியன் டன்களுக்கு ஒத்ததாக இருக்கும், ஆண்டுதோறும் கடல்
நம்மிடம் இருந்து என்ன பெறுகிறது என்பதற்கான அவரது சாலை மதிப்பீடு. அந்த
பிளாஸ்டிக் அதன் தொகுதி மூலக்கூறுகளில் முழுமையாக மக்கும் தன்மைக்கு

எவ்வளவு காலம் ஆகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மதிப்பீடுகள் 450
ஆண்டுகள் முதல் ஒருபோதும் இல்லை.

பிளாஸ்டிக் இல்லாத சுற்றுசூழல்

plastic bag environment pollution with iceberg of trash

சுற்றுச்சூழல் பாதிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருள்களும், அதன் கழிவுப் பொருள்களுமே. எனவேதான் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
குறிப்பாக பாலிதீன் பைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. பாலிதீன் பைகளுக்கு மாற்றாக பிற வகையாலான பைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
உலகளவில் ஆண்டுக்கு 50,000 கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடி வரையிலான அளவுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக ஒவ்வொரு தனிமனிதனும் தலா 150 பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாகவும், இவற்றில் பெரும்பாலானவை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படுபவை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை மொத்த பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டில் 50 சதவீதத்துக்கும் அதிகமானது பாலிதீன் பைகள் தான். ஒரு பிளாஸ்டிக் பை பயன்படுத்தப்படும் நேரம் சராசரி 20 நிமிடங்கள்தான். ஆனால் அவை மக்குவதற்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும்.
பிளாஸ்டிக் கழிவுகள் நிலவளத்தை பாதிக்கின்றன. குறிப்பாக விவசாய நிலங்களில் பரவிக் கிடக்கும் பாலிதீன் கழிவுகளானது, மண்ணில் நீர் இறங்குவதைத் தடுப்பதுடன், காற்று பரவுவதையும் தடுக்கின்றன. இதன் காரணமாக மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
அதுபோல் பாலிதீன் பைகளால் வனப் பகுதியும் பாதிப்படைகின்றது. பயன்படுத்திய பின் சாலையில் வீசியெறியப்படும் பாலிதீன் பைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு வனப் பகுதிகளில் குவிகின்றன. இவற்றை அங்குள்ள மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் பறவைகள் உட்கொள்கின்றன.
இதனால் பாதிக்கப்படும் அவை இறக்க நேரிடுகின்றது. மேலும் காடுகளில் உள்ள மண்வளத்தை பாலிதீன் பைகள் கெடுப்பதுடன், மழை, பெய்யும்போது நீரை மண்ணுக்குள் உறிஞ்ச விடாமலும் தடுக்
கின்றன.கடற்கரை நகரங்களில் வசிப்பவர்களாலும், கடற்கரை பகுதிக்கு சுற்றுலா வருவோராலும் வீசியெறியப்படும் பாலிதீன் பைகள் கடலுக்குள் சென்று சேர்கின்றன. நீர்நிலைகள் கடலில் வந்து சேரும்போதும் அவற்றின் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்கு வருகின்றன.
பிளாஸ்டிக் பைகள் காற்றின் மூலமும் கடலில் சேர்கின்றன. இவற்றை உட்கொள்ளும் மீன்கள், கடல் ஆமைகள், திமிங்கலங்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பெயின் நாட்டு கடற்கரை பகுதி ஒன்றில், 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. உயிருடன் இருந்த அத்திமிங்கலத்தை, மீண்டும் கடலுக்குள் விட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடியாமல் போனது. திமிங்கலமும் இறந்து போனது.
அந்த திமிங்கலத்தின் உடலை பரிசோதித்தபோது, அதன் குடல் பகுதியில் சுமார் 50 கிலோ எடை அளவுக்கு பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு திமிங்கலம் போன்ற பெரிய கடல்வாழ் உயிரினங்கள் இறந்து மிதப்பது அல்லது கரை ஒதுங்குவது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு காரணமாக அமைகிறது.
குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வெளியேற்றுவோர் மிகவும் குறைவு. இதனால் குப்பைக் கிடங்குகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவு ஆக்கிரமித்துள்ளன. அங்கு குப்பைகள் எரிக்கப்படும்போது, பிளாஸ்டிக், பாலீதீன் கழிவுகளும் சேர்ந்து எரிக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும்போது, அவற்றிலிருந்து டையாக்சின் என்ற கொடிய நச்சுவாயு வெளியேறுகிறது. டையாக்சின் என்பது 75 வேதிப் பொருள்கள் அடங்கிய தொகுப்பின்
பெயராகும். இந்த டையாக்சினால் ஆண்மைக்குறைவு, மலட்டுத் தன்மை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். உலகப் புற்றுநோய் ஆய்வுக் கழகம் டையாக்சினை ஒரு புற்றுநோய் காரணி என அடையாளம் கண்டுள்ளது.
கால்வாய்களில் அடைத்துக் கொள்ளும் கழிவுப் பொருள்களில் பெரும்பாலானவை பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்கள், டம்ளர்கள் இவைதான். முறையாக அப்புறப்படுத்தப்படாத இந்த பாலிதீன் பைகளால் மழைநீரும், கழிவுநீரும் சாலையில் குளம்போல் தேங்கும் நிலை உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அதன்பின் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வந்து விட்டது.
தற்போதுகூட பாலிதீன் பைகளுக்கு மாற்றாக, துணிப்பை, சணல் பைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதுபோல் கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்கின்றனர்.
பாலிதீன் பைகளை பறிமுதல் செய்யும் அதிகாரிகள், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதோ, அவற்றை கடைகளுக்கு விநியோகிக்கும் மொத்த விற்பனையாளர் மீதோ நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. உற்பத்திக்குத் தடைவிதித்தால் மட்டுமே பாலிதீன் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும்.

ஒரு நாளுக்கு ஒரு கிரிடிட்கார்டு அளவு நெகிழியை உண்கிறோமாம்

       மனிதர்கள் ஒவ்வொரு வாரமும் சுமார் ஐந்து கிராம் அதாவது கிரெடிட் கார்டின் சமமான எடை அளவில் பிளாஸ்டிக் துகள்களைஎ கவனக்குறைவாக உட்கொள்கிறார்களாம் .இதை ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் செய்த ஆராய்ச்சியில், மக்கள் ஒவ்வொரு வாரமும் சுமார் 2,000 சிறிய பிளாஸ்டிக் துண்டுகளை ஒரு மாதத்திற்கு சுமார் 21 கிராம் அளவும், ஆண்டுக்கு 250 கிராம் அளவும் பிளாஸ்டிக்கை அவர்களுக்கு தெரியாமலே உண்கிறார்கள்.என கருத்து தெரிவிக்கிறது..

மைக்ரோபிளாஸ்டிக்

       உலக வனவிலங்கு அமைப்பு நியமித்த இந்த ஆய்வு, மைக்ரோபிளாஸ்டிக்ஸை மக்கள் உட்கொள்வது குறித்த 50 க்கும் மேற்பட்ட ஆய்வுகளின் தரவை முதன்முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பிளாஸ்டிக் அச்சுறுத்தலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துத்துரைக்கின்றன, “இந்த கண்டுபிடிப்புகள் மக்களின் விழிப்புணர்வை உண்டாக்ககூடியதாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக்குகள் நமது பெருங்கடல்களையும் நீர்வழிகளையும் மாசுபடுத்துவதோடு கடல் வாழ் உயிரினங்களையும் கொல்வது மட்டுமல்லாமல் நமது வாழ்வாதாரத்தையும் தான் கொல்கிறது என்பதை நாம் அறிய வேண்டும்.

     “மனித ஆரோக்கியத்தில் பிளாஸ்டிக்கின் எதிர்மறையான விளைவுகளை  ஆராய்ந்து கொள்ளும்போதே  அது உலகளாவிய பிரச்சினை என்பதென விளங்குகிறது. இதை  பிளாஸ்டிக் மாசுபாட்டின் மூல காரணத்தை நிவர்த்தி செய்வதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்” என்று லம்பெர்டினி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் இயற்கையை  தொடர்ந்து அழித்து  கொண்டிருக்கும் மில்லியன் டன் கணக்கான பிளாஸ்டிக்கை நிறுத்த வேண்டும், “என்று அவர் கூறுகிறார்.

மீனில் நெகிழி

         பிளாஸ்டிக் உட்கொள்வதற்கான மிகப் பெரிய ஆதாரம் உலகெங்கிலும் உள்ள பாட்டிகள் ஆகியவற்றின் வழியாகும் மேலும் நாம் உண்ணும் கடல்வாழ் உயிரிகளுக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கும் காரணமாகிறது. அமெரிக்க அல்லது இந்தியாவில் ஐரோப்பிய அல்லது இந்தோனேசிய நீரை விட இரண்டு மடங்கு அதிகமான பிளாஸ்டிக் காணப்படுகிறது.

     இந்த கண்டுபிடிப்புகள் பிளாஸ்டிக் மாசுபாட்டின் பிரச்சினை ஒரு உலகளாவிய ஒன்றாகும் மற்றும் மக்களை நேரடியாக பாதிக்கிறது என்பதை நிரூபிக்கிறது. நமது சுற்றுச்சூழல் மற்றும் உணவுச் சங்கிலியில் பிளாஸ்டிக் கசிவு என்பது அரசாங்கங்களின் போதிய உலகளாவிய பதிலுடன் இதுவரை சந்திக்கப்பட்டுள்ளது.

           “மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பற்றிய விழிப்புணர்வும் சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆய்வு முதன்முறையாக உட்கொள்ளும் விகிதங்களை துல்லியமாக கணக்கிட உதவியுள்ளது” என்று நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் மைக்ரோபிளாஸ்டிக் ஆராய்ச்சியாளர் தவ பழனிசாமி கூறினார்.

நெகிழிக்கு மாற்றான சில கண்டுபிடிப்புகள்..


காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஒரு ஆரம்ப பள்ளி சமூக ஆய்வுகள் பாடத்தின் ஒரு பகுதியாக நாம் படித்து தேர்ச்சி பெற்றிருக்கலாம். ஆனால், நாம் படித்த பெரும்பாலானவற்றைப் போலவே, குடிமக்களாகிய நம்முடைய தேர்வுகளை வழிநடத்துவதில் இந்த நெகிழி ஒழிப்பு  கொள்கைகளைப் பயன்படுத்தத் தவறுகிறோம். பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று.பிளாஸ்டிக் ஆகும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பிளாஸ்டிக் துறையின் ஆதரவாளர்கள்.

பிளாஸ்டிக்கிற்கு ஏன் மாற்று வழிகள் தேவை என்றால் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 15,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. சராசரியாக, 9,000 டன் மட்டுமே சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. சரியான முறையில் அகற்றப்படாத பிளாஸ்டிக், சந்தேகத்திற்கு இடமில்லாத விலங்குகள் மற்றும் கடல் உயிரினங்களின் தீவனத்தில் அதன் வழியைக் கண்டறிந்து, நமது வடிகால் அமைப்புகளை அடைத்து, நமது மண்ணின் செழுமையைக் குறைக்கிறது. மறுசுழற்சி செய்வதைப் பொறுத்தவரை, இது தற்போதைய நெருக்கடிக்கு ஒரு சிறந்த தீர்வு என்று சொல்லிவிட முடியாது,

இருப்பினும், சில வகையான பிளாஸ்டிக்குகளை கொண்டு செல்லவும் மறுசுழற்சி செய்யவும் தேவையான ஆற்றல் மற்றும் நிதி ஆதாரங்கள் அவற்றின் உற்பத்தி செலவுகளை விட மிகப் பெரியவை, இது மிகவும் நீடித்த தீர்வாக அமைகிறது. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றீடுகளை உருவாக்குவதே ஒரே தீர்வு. அதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் ஏற்கனவே தீர்வுகளை வகுத்து வருகின்றனர்.அப்படி தீர்வு செய்பதவர்களில் சிலஅறியபட வேண்டிய மாற்றங்களை பார்க்கலாம்.

காய்கறி கழிவுகளை மறுசுழற்சி செய்தல்
             கட்டாரைச் சேர்ந்த என்.ஆர்.ஐ தொழில்முனைவோர் அஸ்வத் ஹெக்டே, மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச் துகள்கள், காய்கறி எண்ணெய் மற்றும் கழிவுகள் போன்ற இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பையை உருவாக்கியுள்ளார். இவரது நிறுவனமான என்விகிரீன் இந்த ஆண்டு பெங்களூருவில் தயாரிப்பு தொடங்க உள்ளது, இதில் மக்கும் குப்பை பைகள் தேவைக்கு ஏற்ப தயாரிக்கபடுகிறது. அஸ்வத்தின் கூற்றுப்படி, என்விகிரீன் ஷாப்பிங் பையின் சராசரி விலை ₹ 3 ஆகும், மேலும் இந்த பைகள் எதிர்காலத்தில் பேக்கேஜிங் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறார். 
சணல் மீண்டும் எழுச்சி 
      சணல் மீண்டும் எழுச்சி 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிளாஸ்டிக் துறையால் ஒரு பிரச்சாரத்தை இடுகையிட்டு, சணல் மரிஜுவானாவுடன் இணைப்பதன் மூலம் இழிவுபடுத்தப்பட்டது (இரண்டும் கஞ்சா ஆலையிலிருந்து வந்தவை), இந்த பொருள் இப்போது உலகெங்கிலும் தீவிரமாக மீண்டும் வருகிறது. இந்தியாவில், இளம் தொழில்முனைவோர் குழுவால் அமைக்கப்பட்ட போஹெகோ, சணல் தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறது, சிற்றுண்டி மற்றும் உடைகள் முதல் கட்டுமானம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற தொழில்களுக்கான மூலப்பொருட்கள் வரை. சணல் பருத்தியை விட மூன்று மடங்கு வலிமையானது, மக்கும் மற்றும் மிகவும் நீடித்தது.
பழைய கலாச்சார பயன்பாட்டுமுறை 

    மக்கும் பொருட்கள் வாழை இழை முதல் மூங்கில் வரை, இளம் தொழில்முனைவோர் இந்த செயற்கை அச்சுறுத்தலை நம்பியிருப்பதை அகற்றுவதற்காக பரிசோதனை செய்கிறார்கள். உதாரணமாக, ஷுன்யா மாற்று வழிகள், வெட்டுக்கருவிகள் மற்றும் வைக்கோல்களை (மீண்டும் பயன்படுத்தக்கூடியவை) செய்கின்றன, அதே நேரத்தில் சாதி வாழை செடியிலிருந்து மக்கும், அதிக உறிஞ்சக்கூடிய சுகாதார நாப்கின்களை உருவாக்குகபடுகிறது.
       நாம்  உண்ணக்கூடிய கட்லரி பிளாஸ்டிக் என்பது நச்சுத்தன்மையுள்ள மற்றும் புற்றுநோய்க்கான சாத்தியமான ரசாயனங்களால் ஆனது. பிளாஸ்டிக் கட்லரி உணவுக்காகப் பயன்படுத்தப்படும்போது, ​​இந்த இரசாயனங்கள் நுகர்பொருட்களில் கசிந்து உணவை மாசுபடுத்தும் வாய்ப்பு உள்ளது. நாராயண பீசபதியின் முயற்சியான பேக்கியும் ஜோவர், அரிசி மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றின் கலவையிலிருந்து உண்ணக்கூடிய கரண்டி தயாரிப்பதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க முயற்சிக்கின்றனர். ஒரு குஜராத்தி மனிதர் கக்ராவின் ஒரு பகுதியை ஒரு கரண்டியால் இனிப்பு சாப்பிடுவதைப் பார்த்தபோது இந்த யோசனை அவரைத் தாக்கியது. பேக்கியின் சுவையான, இனிப்பு மற்றும் வெற்று கரண்டிகளை சாப்பிடலாம், அல்லது சிதைந்து விடலாம்,  
    புதுமைப்பித்தர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை பாரம்பரிய மற்றும் புதிய வயதுப் பொருட்களுக்கு மாற்றியமைக்கும்போது, ​​பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கு மாற்றாக ஆதரவளிக்க நுகர்வோரின் மனநிலையை முறையாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. உங்கள் தேர்வுகளை நீங்கள் பகுத்தறிவு செய்ய முடிந்தால், அவற்றைப் பின்பற்றுவது மற்றும் எதிர்காலத்தில் அதிக நனவான முடிவுகளை எடுப்பது எளிதாகிறது. நம்மை பொறுத்தவரை, எதிர்காலத்தில் நாம் கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால்களில் காலநிலை மாற்றம் ஒன்றாகும், மேலும் இதன் மூலம் நம் வழியை நாம் புதுமைப்படுத்த முடியும்.