
நெகிழி மனித உயிரை மட்டும் இல்லாமல் இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரையும் வேட்டையாட வந்திருக்கும் ஒரு கொடிய மனித கண்டுபிடிப்பு. அன்னிய நாட்டு பண்பாட்டுக்கு அடிமையாய் இருக்கும் நமது இந்திய இளைஞர்கள் இதோ சில நல்ல பழக்கவழக்களையும் அவர்களிடம் இருந்து கடைபிடிக்கின்றனர்.அப்படியாக இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் கையில் எடுத்துள்ள ஒரு திட்டச்செயல் தான் பிளக்கிங்.
பிளக்கிங் வரலாறு
சுவீடன் நாட்டில் சில முக்கிய நகரங்களில் தினமும் உடல் எடையை குறைக்க ஜாக்கிங் போகும் மக்கள் ஒடும் பாதையில் உள்ள கழிவு நெகிழியை ஒரு பெரிய பையில் சேகரித்து கொண்டே ஓடுவதாய் திட்டமிடுகிறார்கள். முதலில் சிறிய குழுவாக ஆரம்பித்த இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு நன்கு பிரபலமாகிவிட்டது. பிறகு மக்கள் எல்லோரும் இதில் பங்கு கொள்ள ஆரம்பித்து விட்டனர். பொதுவாகவே சில நல்ல விஷயங்கள் அவ்வளவு சிக்கிரமாக பகிரப்படுவதில்லை. ஆம் அது உண்மையான ஒன்று தான். இப்படி தொடங்கிய இந்த திட்டம் தான் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகளை ஒழிக்க கணிசமாக உலக மக்கள் மத்தியே பரவிவருகிறது.
இந்தியாவில் பிளக்கிங்
கடந்த ஓராண்டாக இந்தியாவிலும் நெகிழயை ஒழிக்க போராடி கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள்.இதெற்கென்று தனியாக அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. தினமும் காலையில் ஜாக்க்கிங் போகும் பாதையில் அருகில் உள்ள காடுகளில் சாலைகளில் உள்ள குப்பை நெகிழியை சேகரிக்கிறார்கள். இதை ஒரு உற்சாகமான மனநிலைமையோடு செய்கிறார்கள். இதுவும் ஒரு உடல் பயிற்சியை போல் தானாம்.சும்மா
ஓடுவதற்கு பதிலாக இப்படி குனிந்து நிமிந்து வேலை செய்வதன் முலம் உடலின் அதிக கலோரி குறைகிறதாம்.
இப்போதெல்லாம் வயதான முதியவர்கள் கூட இந்த பெரும் சேவையை செய்து வருகிறார்கள். இப்படியாவது இந்த பூமிக்கு நாங்க ஏதோ நல்லது பண்ணிட்டு போறமே என்கிறார்கள் வாக்கிங் போய்க்கொண்டு உயிரை பிடித்து வைத்திருக்கும் சில முதியவர்கள். இந்தியாவில் பொதுவாக மக்களிடையே குறை சொல்லி கொண்டிருக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது.யாரும் அவர்கள் சுற்றத்தை சுத்தமாக வைத்து கொள்ள முன்வருவதில்லை.என்ற கருத்தை இந்த சம்பவம் உடைத்திருக்கிறது என சொல்லலாம்.
நெகிழியால் அழியும் வாயில்லா ஜீவிகள்
மக்களின் தேவையையும் கவர்ச்சியையும் பூர்த்தி செய்யும் இந்த நெகிழி தான்.பல கடல் வாழ் உயிர்களை கொல்கிறது. நாம் பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் பைகள் நேரடியாக கடலுக்குத்தான் குப்பையாய் போய் சேர்கிறது. கடலுக்கு மேல் மட்டத்தில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மிதந்து கொண்டிருக்கின்றன. அவை கடல் நீருக்குள் செல்லும் போது சில கடல் வாழ் உயிரினங்கள் உண்கிறது அவை அதன் வயிற்று பாதையில் சிக்கி அவற்றை கொல்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு திமிங்கலம் மட்டும் மொத்தம் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கி உயிரிழந்து மிதந்து கொண்டிருந்ததாம்.பாவம் என்ன செய்யும் அந்த உயிர்களுக்கு நெகிழியை உண்டால் வரும் பிரச்சனை தெரிவதில்லை.மனிதர்கள் ஆகிய புத்தியுள்ள நாம் தான் அதன் உயிரை கொல்ல மறைமுகமாய் வேலை செய்கிறோம்.முடிந்த வரை நெகிழியை தவிர்ப்போம் .மாசுபாடில்ல புவியை உருவாக்குவோம்














