கடல் வாழ் உயிர்களின் அழிவு

உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும், மிக முக்கியமானது.

நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை, அழகிய கடற்கரைப் பிரதேசங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துச் செல்லும் கடற்கரைச் சூழல் மாசடைதல் காரணமாக, அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது.

உலகளாவிய ரீதியில், ஒவ்வொரு வருடமும், கடலில் மாத்திரம் 60 சதவீதமான பிளாஸ்டிக் பொருட்களுடன் கூடிய 1,000 தொன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்படுகின்றன. புள்ளிவிவரத்தின்படி, மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 1ஆவது இடத்தில், சீனா இருக்கிறது. இலங்கை, 5ஆவது இடத்தில் இருக்கிறது. ஆசிய கடல் வலயத்தில் மத்தியநிலையமாக இருப்பது, இலங்கைக்கு முக்கியமானதாகும். ஆனால், கடற்கரை மாசடைதலில் இலங்கைக்குக் கிடைத்திருக்கின்ற இந்த நிலையானது, அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.

கடற்கரைதான், மக்களுக்கான மிகப்பெரிய பொழுதுபோக்காகும். சமுத்திரப் பிராந்தியச் சட்டப்படி, இலங்கையைச் சுற்றி 1,700 கிலோமீற்றர் பரப்பு, கரையோர மாசடைதல் தவிர்ப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில், கடற்கரையும் கடல் வளமும், தீவிரமாக மாசடைந்து வருகிறது.

ஆனால், இன்னும் கடலில் மாசு ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி, போதியளவிலான விழிப்புணர்வு, மக்களிடம் இல்லை என்பதே உண்மையானது. அதேபோல், அதற்கெதிரான சட்டங்களும் இன்னும் வலுவடையவில்லை. குறிப்பாக, குப்பைகளைக் கடற்கரையோரங்களில் போடுவதால், கடல் வளம் பாதிக்கப்படும் என்பது, எம்மிடையே பலருக்கும் தெரியாதா, இல்லையெனில் தெரிந்தும் தெரியாதது போல் நடக்கிறோமா என்பது, புதிரான ஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறு இவ்விடயத்தின் ஆபத்தை அறிந்தவர்களின் உதாசீனத்துக்கு, சட்டத்தில் உள்ள குறைபாடே காரணமாகும்.

கடற்கரையை அண்மித்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வௌியேறும் கழிவுகள் காரணமாகவும் பிற நிர்மாண நடவடிக்கைகள் காரணமாகவும், கடற்கரை மாசடைகிறது. மேலும், கடற்கரைக்கு வரும் உள்ளூர், வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தமது குப்பைகளை ஆங்காங்கே வீசிச்செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வீசப்படும் குப்பைகள், கடலினுள் சேரும் போது, கடல் வள உயிரினங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.

தற்போது எமது சமுத்திரங்களில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்த்து, மூன்றில் இரண்டு நீர் வளத்தைக் கொண்ட இந்த பூமியிலில் இந்தக் கழிவுகள் மூலம் உயிரினங்களுக்கு ஏற்படுகின்ற தீமைகளைக் கணக்கெடுப்பதில் மட்டும் சென்று கொண்டிருப்பது அர்த்தமற்றதாகிவிடும்.

அத்துடன், கரையோரப் பாதிப்புப் பற்றிச் சிந்திக்கும் போது, கரையோரங்களின் ஊடாக மனித உயிர்கள் எதிர்கொண்டுள்ள அபாயங்களிலிருந்து பாதுகாப்பான முறையில் நடந்து கொள்வது பற்றியும் அதிகம் கவனமெடுக்க வேண்டும்.

கடல் சம்பந்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைககளின் படி (The United Nations Convention on the Law of the Sea) சமுத்திரத்தில், குறிப்பிட்ட சில பகுதிகள் எமது நாட்டுக்குச் சொந்தமானவையாகும். இலங்கை, 1982ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதிலும், ஜூலை 19, 1997இலேயே, இது அமுலுக்கு வந்தது.

இதன்படி எமது நாட்டின் சமுத்திர பிரதேசமானது, பல சமுத்திர வலயங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து கடற்பரப்பை நோக்கி 12 கடல் மைல் தூரத்துக்கான கடலோர வலயம் தரைசார்ந்த கடல்வளம் என அழைக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தின் வளி, கடல் நீர்பரப்பு, கடலின் அடிப்பக்கம் ஆகிய அனைத்தும், எமது நாட்டுக்கே சொந்தமானது. இதன் விஸ்தீரணம் அண்ணளவாக 21,700 சதுர கிலோமீற்றர்களாகும்.

தரைசார்ந்த கடல் எல்லையில் இருந்து 12 கடல்மைல் ஆரம்பப் பிரதேசம், “கடற்புல ஆட்பகுதி” என அழைக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் நீர் வளம் மாத்திரம் காணப்படுவதுடன், இதன் கடல் அடிப்பக்கம் வரையுள்ள பிரதேசம், எமது நாட்டுக்கு உரித்தானது. இவற்றைக் கண்காணித்துப் பராமரித்தல், ஆய்வுகளை மேற்கொள்ளுதல் என்பவற்றுடன் உயிரியல், பௌதீகவியல் விவசாயம் என்பனவும், எமது நாட்டுக்கே முற்றிலும் உரித்துடையது.

இதற்கமைய, எமது நாட்டுக்குரிய அனைத்து சமுத்திர வலயங்களும் சமுத்திர வலய சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய மாசுத் தவிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும், எமது நாட்டையே சாரும். இவ்வாறானதொரு நிலையில், மாசுபட்ட கடற்கரையில், இலங்கை 5ஆவது இடத்தில் இருப்பது சர்வதேசத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் ஒன்றாக கருதநேரிடும். அது மாத்திரம் அல்லாது, உள்நாட்டில் அதன் தாக்கம், எவ்வாறு மக்களைச் சென்றடையும் என்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நான்கு பக்கங்களிலும் கடலால் சூழ்ந்த நாடாகும். எனவே நாம், கடற்கரையை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் கடல் வளம் பாதிப்படையாமல், வளம் பெறும். எனவே, அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு, எம் ஒவ்வொருவருடைய மனதிலும் எழ வேண்டும். கடற்பகுதியை அண்டிய பகுதிகளில் தொழிற்சாலை, பொழுதுபோக்கு நிலையங்கள், நவீன துறைமுகம் அமைப்பது வரை, அரசாங்கம் சார்பிலானாலும் சரி, தனியார்துறைகளானாலும் சரி, பல விடயங்களில் அக்கறை இன்றிச் செயற்படுவதைக் காணமுடிகிறது.

மனிதனால் ஏதேனும் பொருட்கள் அல்லது சக்தி வளங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடற்கரையில் செலுத்துவதன் காரணமாக, கடல் வாழ் உயிரினங்கள், மனித சுகாதாரம் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன், கடல் சார்ந்த மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்படையும். மேலும், கடல் நீரின் தரத்தை அழிவடையச் செய்யும். அத்துடன், சமுத்திரத்துடன் தொடர்புபட்ட அனைத்து சுற்றுலாத்துறை நடவடிக்கைகளும் வீழ்ச்சியடையும்.

இதனைக் கவனத்திற்கொண்டே, சர்வதேச கடல் சார் வலயங்களைத் தூய்மைப்படுத்துவதற்கான தினமொன்று பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தில் கடலின் பெறுமதியை, அனைத்து மக்களும் உணர்ந்து செயற்படுவது முக்கியமாகும்.

ஆறுகள், நீரோடைகளில் நாங்கள் வருடாந்தம் 1.59 மெற்றிக்தொன் பிளாஸ்டிக்கையும் பொலித்தீனையும் வீசுகின்றோம். அந்த ஆறுகள், கடலில் சென்று கலக்கின்றன. இவையும், கடற்கரை மாசடைவதற்கு முக்கியமான காரணிகளாக அமைந்துள்ளன.

1975ஆம் ஆண்டை விடவும், இலங்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு, தற்போது, 625 சதவீதம் அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக்கினதும் பொலித்தீனதும் பாவனை, தேவையற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டமை, பயன்படுத்தப்பட்டமை, முறையற்ற ரீதியில் அகற்றியமை உள்ளிட்ட காரணங்களால், சுற்றுசூழலுக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து, இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் கடல்களில் ஏற்படுகின்ற நீரோட்டங்கள் மூலமாகவும், இவ்வாறான கழிவுகள் தொலைதூரத்திலிருந்து, இலங்கை கடற்கரைகளுக்கு இழுத்து வரப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

பல்வேறான நிறுவனங்கள், கழிவுகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது, அவற்றைக் கடலுக்குள் கலக்கச் செய்துவிடுகின்றன. ஆகையால், பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் உள்ளிட்ட வகைகள் தொடர்பில், நிறுவனங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தேச்சியாக இடம்பெறும் கடற்கரை மாசடைதலைத் தடுக்க, அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இலங்கையில், ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையில், சர்வதேச கடற்கரை தூய்மைதின தேசிய நிகழ்வு அனுஷ்டிக்கப்படுகிறது. கடற்கரை தூய்மை தினம், உலகெங்கிலும் உள்ள கடற்கரைப் பிரதேசங்கள் மற்றும் கரையோரத்தை அண்மித்த பிரதேசங்களைச் சுத்திகரித்துப் பேணுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது உலகில் முன்னெடுக்கப்படும் ஒரு மிகப்பெரும் தன்னார்வ நிகழ்வாகக் கருதப்படுவதோடு, 26 வருடங்களுக்கும் மேலாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை, பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், சாதாரண பொது மக்களிடையே இது பற்றிய ஆயத்தம் மற்றும் அறிவை விருத்தி செய்வதில் அக்கறைக் காட்டிவருகிறது. அதாவது, பாடசாலை சார்ந்த கடல் சுற்றாடல் குழுக்கள், விடய அறிவை விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள், கண்காட்சி அலகுகளை விருத்தி செய்தல், வானொலி நிகழ்ச்சித் திட்டங்கள், விடய அறிவை விருத்தி செய்வதற்கான பொருட்களை பங்கிடல் ஆகிய பிரிவுகளில் அறிவூட்டலை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலதிகமாக, இலங்கைக் கடற்பரப்பில் எதிர்காலத்தில் சட்டமொன்று இயற்றப்பட வேண்டும். அதன்மூலம் வெளியிடப்படும் கடல் எல்லையில் கப்பல்கள் மூலம் அல்லது கடற்கரைப் பிரதேசங்களின் மூலம் கடல் மாசுறுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், நிர்வகித்தல், முகாமைத்துவம் செய்யும் பணிகளுக்கான திட்டமொன்றைத் தயாரித்துச் செயற்படுத்த முடியும்.

இலங்கை நீர்ப்பரப்பிலும் கடற் பிரதேசத்திலும் சூழல் மாசடைவதைத் தடுக்கும் செயற்பாட்டுக்காக, கடல் எல்லைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அல்லது இதன் பின்னர் வெளியிடப்படுகின்ற வேறு யாதேனும் கடற்பரப்பினுள் அல்லது இலங்கையின் முன்னைய கடல் எல்லையினுள் மேற்கொள்ளப்படுகின்ற கடல் எண்ணெய் கொண்டு செல்லல் நடவடிக்கைகள், “பங்கரிங்” நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்பார்வை செய்யப்பட வேண்டும். இவற்றை அரசாங்கம் மேற்கொள்ளும் பட்சத்தில், கடற்கரையையும் கடல் வளத்தையும் பாதுகாக்க உதவியாக அமையும்.

மேலும், பிளாஸ்டிக் கதிரைகள், பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் பாரிய அச்சுறுத்தலாகும். அவை தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வேண்டும். சுற்றாடல் பாதுகாப்பதற்கான அறிவு, மனப்பான்மை, திறமை ஆகியன மேம்படுத்தப்படவேண்டும். அப்போதுதான், கடல்வள சுற்றுச்சூழல், கரையோரங்களைப் பாதுகாக்க முடியும்.

அத்துடன், கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள், தமது குப்பைகளை ஒரு பையிலே எடுத்துச் சென்று, அவற்றை உரிய முறையில் அப்புறப்படுத்தும் நடைமுறை உருவாக்க வேண்டும்.

மில்லியன் கணக்கான தொன் குப்பைகள் கடலில் சேர்க்கப்படுவது சம்பந்தமாகக் கதைப்பதற்கு முன், எமது வீட்டுக்கழிவுகளை எவ்வாறு அகற்றுவது என நாம் சிந்திக்க வேண்டும். நாங்கள் சூழல் சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிக் கதைக்கின்றோமே தவிர, நாம் செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றிச் சிந்திப்பதில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் கடமைகளைப் பொறுப்பேற்றுச் செய்தால், எங்களால் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

கடலில் உருவாகிய சிறு உயிரினங்கள் கூர்ப்படைந்து, பின்னர் கடலிலிருந்து தரைக்கு வந்த விலங்குகளின் தொடர்ச்சியான கூர்ப்பின் விளைவாகவே, மனித குலத்தின் ஆரம்பமென்பது நிகழ்ந்தது என, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர். அவ்வாறான முக்கியமான கடலையும் அதன் கரைகளையும், எந்தளவுக்கு நாங்கள் பாதுகாக்கிறோம் என்பது, எங்களுக்குரிய கடமை என்பதில், மாற்றுக் கருத்துகள் இருக்கக்கூடாது.

நெகிழியால் உயிரிழந்த தாய்லாந்து தாய்

நோய்வாய்ப்பட்ட குழந்தை துகோங், மீட்புக்கான போராட்டம் தாய்லாந்தில் இதயங்களை வென்றது மற்றும் கடல் பாதுகாப்பில் கவனத்தை ஈர்த்தது.

அவரது வயிற்றில் பிளாஸ்டிக் பிட்ஸால் அதிகரித்த தொற்றுநோயால் இறந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரியம் சில மாதங்களுக்கு முன்பு தென்மேற்கு தாய்லாந்தின் ஆழமற்ற நீரில் கழுவப்பட்டு, மீட்கப்பட்டவர்களுக்கு அடுத்தபடியாக விளையாடுவதைப் பற்றிய புகைப்படங்கள் விரைவாக வைரலாகின.

மற்றொரு அனாதை துகோங்கின் கண்டுபிடிப்பு விரைவில் கடல் மாடுகளின் பிரபல அந்தஸ்தைக் கொண்டுவந்தது, தாய் இளவரசியின் கவனத்தை – இரண்டாவதுவருக்கு “ஜமீல்” என்று பெயரிட்டவர் – மற்றும் சுற்று-கடிகார வெப்காஸ்ட்கள் பார்வையாளர்களுக்கு உணவளிப்பதற்கு முன் வரிசையில் இருக்கை மற்றும் சிகிச்சை. ஆனால் அதிர்ச்சியடைந்த பின்னர் நள்ளிரவுக்குப் பிறகு மரியம் இறந்தார்,

அவரை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன என்று ட்ராங் மாகாண கடல் பூங்காவின் தலைவர் சாயாப்ருக் வெராவோங் AFP இடம் கூறினார். “அவர் ஒரு இரத்த தொற்று மற்றும் அவரது வயிற்றில் சீழ் காரணமாக இறந்தார்,” என்று அவர் கூறினார், மேலும் அவரது குடலில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை அவர்கள் கண்டுபிடித்தனர்.

தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறை (டி.என்.பி) வெளியிட்டுள்ள காட்சிகள், சி.பீ.ஆரைப் பயன்படுத்தி மரியத்தை புதுப்பிக்க முயற்சிக்கும் கால்நடைகளைக் காட்டின. அவளது குடலில் பல பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்டன, ஒன்று 20 சென்டிமீட்டர் (எட்டு அங்குலங்கள்) வரை அளவிடப்படுகிறது. பிளாஸ்டிக் விலங்குகளின் வயிற்றில் தடைகளை ஏற்படுத்தியது, இது வீக்கம் மற்றும் வாயு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது, கால்நடை மருத்துவர் நந்தரிகா சான்சு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். “நாங்கள் சுவாச நோய்த்தொற்றை ஓரளவுக்கு சிகிச்சையளிக்க முடியும், ஆனால் பிளாஸ்டிக் குப்பைகளின் தடையை குணப்படுத்த முடியவில்லை,” என்று அவர் இடுகையில் கூறினார், இளம் விலங்குகளின் மரணம் ஒரு பாடமாக பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “அவள் எப்படி நேசிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தாள், பின்னர் தயவுசெய்து எங்களை எல்லோரையும் கவனித்து அவளுடைய இனத்தை பாதுகாக்க சொல்லுங்கள் என்று சொல்வது போல் போய்விட்டாள்.”

டுகோங்ஸ் தாய்லாந்தில் தலைப்புச் செய்திகளை உருவாக்கும் சமீபத்திய கடல் உயிரினங்கள் ஆகும், அவற்றின் பிளாஸ்டிக் மூச்சுத் திணறல் கூட வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இரண்டு விலங்குகளும் தெற்கு தாய்லாந்தில் காணப்பட்டன, சுமார் 250 கடல் மாடுகள் உள்ளன, அவை மானேட்டியுடன் நெருங்கிய தொடர்புடையவை மற்றும் பாதிக்கப்படக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

“அழகான கடல் இளவரசன்” என்று மொழிபெயர்க்கப்பட்ட ஜமீல், ஃபூக்கெட்டில் தனித்தனியாக கவனிக்கப்பட்டு வருகிறார். மரியமின் மரணம் கடல் மற்றும் கடலோர வளத் துறையின் பேஸ்புக் பக்கத்திலும் அறிவிக்கப்பட்டது.

நெகிழி ஒழிப்பு-மாற்றம் தொடங்கவேண்டியது நமது பொறுப்பு

நம் சமூகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தற்போது கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பைகள் இல்லாமல் இன்று எந்த மூலை முடுக்கிலும் வர்த்தகம் நடைபெறுவதில்லை. அன்றாடம் வீடுகளில் சேரும் கழிவு மற்றும் குப்பைகளில் பிளாஸ்டிக்கின் பங்கு சரிபாதியாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக வெப்பமயம் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ள இந்த சூழ்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும்.

மனித சமூகத்தால் அன்றாடம் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனோ-ஆக்சைடு, குளோரோ ஃப்ளோரோ கார்பன் போன்றவை வளிமண்டலத்தை அதிக அளவு மாசுபடுத்துகிறது. பிளாஸ்டிக் சார்ந்த கழிவுப் பொருள்களும் குப்பைகளும் கூட இதற்கு காரணமாக அமைகிறது.இந்த நச்சு வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் புவி வெப்பம் அடைந்து எதிர்காலத்தில் பனிமலைகள் உருகி கடற்கரை ஓர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது புவி வெப்பம் அடைவதால் நமது எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பிளாஸ்டிக் பொருள்களையும், பிளாஸ்டிக் குப்பைகளையும், பிளாஸ்டிக் உறைகளையும் மக்கள் எளிதாகக் கையாள்கின்றனர். சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் அளவு 1.86 லட்சம் கிலோவாகும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் தினமும் வெளியேற்றப்படும் அல்லது பொதுமக்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 250 டன் வரை என்பதைக் கேட்கும் போது நெஞ்சு வெடிக்கிறது.

ஒரு பிளாஸ்டிக் பொருள் மட்குவதற்கு ஆகும் காலம் 100 ஆண்டு முதல் 1,000 ஆண்டு வரை ஆகும். ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள்.
வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப பொருள்கள், தொலைதொடர்பு சாதனப் பொருள்கள், கணினி பாகங்கள் போன்றவை அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன. இப்பொழுது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புகளும், தடைகளும், அதிகரித்து வருகிறது. சுற்றுச் சூழல் வல்லுநர்களும் இயற்கை ஆர்வலர்களும் பிளாஸ்டிக்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும், தீமைகளையும், பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவை ஒருபுறம் நடந்தாலும் அன்றாடம் நாம் தொழிற்சாலைகளில், வீடுகளில் வணிக வளாகங்களில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் அரசு உருவாக்கி தீவிரப்படுத்தாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.
பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை அரசே நடத்தி வணிக ரீதியாக உற்பத்தி செய்து பழைய பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் நல்ல விலை கொடுத்துத் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை அரசே அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மறுசுழற்சி மூலம் மாற்றுப் பொருள்கள் தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும்.

இதர பிளாஸ்டிக்
ரொட்டி உறை, மிட்டாய் உறை, சாக்லெட் உறை, பேனாக்கள், எண்ணெய் பொருள்கள், கயிறுகள், டப்பாக்கள், டின்கள், மசாலை பொருள்கள், விளம்பரப் பதாகைகள் போன்றவை பிளாஸ்டிக்கினால் தயாரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு அட்டை, அலுமினியப் பொருள்களால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ. 100-ககும் மேல் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே வணிக நோக்கில் தயாரிக்க அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும். உணவு நிறுவனங்கள், உணவகங்கள், பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்த்து அட்டை, அலுமினிய, சணல் பைகளையும் வாழை இலை முதலியவற்றையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தீர்மானம்நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து கண்ணாடி பாட்டில்கள், உலோபக பாட்டில்கள், மற்றும் அலுமினியப் பாட்டில்களையும் பயன்படுத்த நிறுவனங்களும், பொதுமக்களும் முன்வர வேண்டும்.

மனிதனின் மறைமுக எதிரியாய் நெகிழி

நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம். இது நிதர்சனம்.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூச்சல் போடுவது, பேரணி நடத்துவது எல்லாம் நூறு சதவீத வெற்றியைத் தருகிறதா என்பது கேள்விக்குறியே! நாம் எழுதும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை நெகிழியின் ஆதிக்கம் கோலோச்சுகிறது.

பிளாஸ்டிக் உடல் நலத்துக்கு கேடு என்பதை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அது நிலத்தில் மக்காது, நிலத்தடி நீர் அளவை பாதிக்கும், அதை எரிப்பதால் டை ஆக்ஸின் போன்ற பல தீமை விளைவிக்கக் கூடி வாயுக்கள் வெளியேறி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவை எல்லாம் தெரிந்தவைதான்.

சூடான திரவ உணவு வகைகள் காபி, பால், சாதம், சாம்பார், குருமா ஆகியவற்றை பாலிதீன் பைகள் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்தால் நச்சுப் பொருள்கள் உணவில் ஊடுருவும். திரவ உணவுப் பொருள்களை சேமித்தால் படிம நச்சாக மெது, மெதுவாக உணவில் சேருகிறது. உப்பிட்ட பொருள்கள், ஊறுகாய்கள், புளிச்சத்து நிறைந்த பழச்சாறு இவற்றில் பிளாஸ்டிக் கலக்கிறது. பிஸ்கட், மிக்ஸர் போன்ற உலர்ந்த உணவுப் பொருள்கள்

போன்றவற்றில் நச்சு ஊடுருவல் குறைவு.

நீர், உணவைச் சேமிக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள், பாலிதீன் பைகள் போன்றவை உணவுத் தரம் (ச்ர்ர்க் வ்ன்ஹப்ண்ற்ஹ்) உள்ளவையா என்று தெரிந்து கொண்டுதான் பயன்படுத்த வேண்டும்.

பயணம் செய்யும்போது வாங்கும் மினரல் வாட்டர் பாட்டில்கள், ஜூஸ் பாட்டில்கள் போன்றவற்றை நாம் வீட்டுக்குக் கொண்டு வந்து உபயோகிக்கிறோம்.

காலி பாட்டிலை லேசாக அமுக்கிப் பார்ப்போம். நசுங்கினால் தூக்கிப் போட்டு விடுவோம். கெட்டியாக இருந்தால் அதைப் பாதுகாத்து மறுபடியும் பயன்படுத்துகிறோம்.

இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதில் ஆபத்து இருக்கிறது. பாட்டிலை கவிழ்த்து அடியில் பார்த்தால் கீழ்க் கண்ட குறியீடுகள் இருக்கும். சில எண்கள், சில எழுத்துக்கள்.

இவற்றுக்கான விளக்கம்

1 பாலி எதிலீன் டெரிபாலேட் டஉபஉ

2. அடல் பாலிஎதிலீன் ஏஈடஉ

3. பிளாஸ்டிக் ஆக்கப்படாத பாலிவினைல் குளோரைடு டயஇ

4. அடர்த்தி குறைந்த பாலி எதிலீன் கஈடஉ

5. பாலிப் ரொபிலீன் டட

6. பாலிஸ்டெரின் அல்லது விரிவடையும் பாலிஸ்டெரின் டந

7. பாலி கார்போனேட் (டஇ ஹய்க் ர்ற்ட்ங்ழ்ள்)

பழச்சாறு, குடிநீர், மென்பான பாட்டில்கள் டஉபஉ – யால் தயாரிக்கப்படுகின்றன.

பால் பாட்டில், குடிநீர் பாட்டில் நீர் ஜக்கு போன்றவை ஏஈடஉ- யால் தயாரிக்கப்படுகின்றன.

குடிநீர் ஜக்கு, சமையல் எண்ணெய் ஆகியவை டயஇ யால் தயாரிக்கப்படுகின்றன.

யோகர்ட் எனப்படும் தயிர் சிரப் பாட்டில்கள் டட -யால் தயாரிக்கப்படுகின்றன.

சில வகை பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து நச்சுத்தன்மையும், வேதியியல் பொருள்களும் ஊடுருவி நமது குடிநீரில், பழச்சாறில் உணவில் கலந்துவிடும் ஆபத்து உள்ளது.

இவற்றில் கிட்டத்தட்ட எல்லாமே அதிகக் கெடுதல் செய்பவைதான்.

இந்தப் பொருள்கள் படிம நச்சுக்கள் போல் உடலில் ஆபத்தை விளைவிக்கின்றன. இந்த நச்சுக்களால் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், இவை நாளமில்லா சுரப்பி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆண்ள்ல்ப்ங்ய்ர்ப்-அ என்பது நெகிழி தயாரிக்க உதவும் வேதியியல் பொருள். பழச்சாறு பாட்டில்கள், குழந்தைகளுக்கான பால் பாட்டில்கள் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை அல்லவா?

காரில் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் வைத்துப் பயன்படுத்தினால் காருக்குள் ஏற்படும் கதிரியக்கமும் சேர்ந்து மகளிருக்கு கருப்பை வாய் புற்று நோய் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்கள்- டப்பாக்களில் குடிநீர், ஜூஸ், உணவுப் பொருள்களை அடைத்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பாட்டில்களின் அடியில் உள்ள எண்ணைக் கவனித்து அன்றாட வீட்டு உபயோகத்துக்கு பாலி எதிலீன் டெரிபாலேட், அடல் பாலிஎதிலீன், பாலிஸ்டெரின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பாலிகார்பனேட்- பிசி (7) வகை பிளாஸ்டிக்குகள் ஓரளவு பாதுகாப்பானவை.

நெகிழியின் வாழ்நாள் மனிதத்தின் அழிவு நாள்

நெகிழி என்பது நம்முடைய புவி சூழலைஅழிக்கும் பொருட்களில் ஒன்றானது.பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில்உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்றுமிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனித இனம் பல்வேறு துறைகளில் புதுப்புது வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. ஏன் இன்னும் பல அபரிமிதமான வளர்ச்சியையும் சமூகம் காணப்போகிறது. இதில் ஒரு பாதகமான செயல்பாடு எதுவென்றால் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின் பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நாம் நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனைப் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் இதனை எதிர்த்து உலகெங்கும் ஒரு எதிர்ப்புக்குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்று கூட்டம் போட்டுப் பேசுவதும் கொடி பிடித்து போராடுவதும் நூறு சதவீத வெற்றியைத் தருகிறதா? என்றால் அது பெரும் கேள்விக்குறியே. இன்று நாம் எழுதும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை நெகிழியின் ஆதிக்கமே தலைத்தோங்கியுள்ளது.

இன்று நாம் நெகிழிப் பைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியும் செயலானது படுபாதகச் செயலாகும். ஏனென்றால் பொதுமக்கள் பொருட்களை வாங்கி எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் நெகிழிப்பைகளின் சராசரி ஆயுட்காலம் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அதனைக் கையில் வாங்குவதற்கும் குப்பையில் எரிவதற்கும் இடையே வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே நெகிழிப்பை மனிதனுக்குப் பயன்படுகிறது. ஆனால் இந்தப் பை அழிவதற்கு 1000 ஆண்டுகள் ஆகுமாம். இப்பை காலகாலத்திற்கும் அழியாமல் இருந்து சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும்.

இன்று ஒருவர் தூக்கி எறியும் நெகிழிப்பை அவரது பிள்ளைகள், பேரன், பேத்திகள் இவர்களின் பிள்ளைகள் எனப் பல தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.

உற்பத்தி:

இந்த நெகிழி என்பது பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கும் போது பாலி எத்திலின் என்ற துணை பொருளாகக் கிடைக்கிறது. நெகிழிப் பையைத் தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு அதிக எரிபொருள் காகிதப்பையை உருவாக்கப் பயன்படுகிறது. ஆகையால் நாம் முடிந்தளவு இருவிதமான பைகளையும் பயன்படுத்துவதை தவிர்த்து முடிந்த வரை துணிப்பைகளைப் பயன்படுத்துவதே இயற்கைக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் பெருந்தொண்டாகும்.

மக்கள் பயன்பாட்டில் நெகிழியின் பங்கு:

ஏதோ ஒரு விதத்தில் தினமும் நெகிழியின் பயன்பாடு அல்லாது நாம் இருக்க முடியாது, என்ற நிலை இங்கு உருவாகிவிட்டது. இதில் சூடான திரவ உணவு வகைகளான காபி, பால், சாதம், சாம்பார், குருமா ஆகியவற்றைப் பாலித்தீன் பைகள் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்தால் நச்சுப் பொருட்கள் இந்த உணவில் ஊடுருவும் திரவ உணவுப் பொருட்களைச் சேமித்தால் படிம நச்சாக மெது, மெதுவாக உணவில் சேருகிறது. தவிர உப்பட்ட பொருட்களான ஊறுகாய்கள், புளிச்சத்து நிறைந்த பழச்சாறு இவற்றில் பிளாஸ்டிக் கலக்கிறது.

பிஸ்கட், மிக்சர், காராச்சேவு, முறுக்கு போன்ற உலர்ந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றில் இந்த பாலித்தீனின் நச்சு ஊடுறுவல் குறைவு, நீர் உணவைச் சேமிக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள், பாலித்தீன் பைகள் போன்றவை உணவுத்தரம் உள்ளவையா? என்று தெரிந்து கொண்டுதான் பயன்படுத்த வேண்டும். நம் நாட்டில் நெடுந்தொலைவில் பேருந்து, புகைவண்டிப் பயணமோ? அல்லது அதிக நேரம் நடைப்பயணமோ? மேற்கொள்ளும் போது நீர் குடுவைகள், குளிர்பான (ஜுஸ்) குடுவைகள் போன்றவற்றை வாங்கி உபயோகப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் காலியான அந்தப் பாட்டில்களைக் கொண்டு வந்து வீட்டில் மண்ணென்ணெய் வாங்கவும், சமையல் எண்ணெய் ஊற்றி வைக்கவும் இன்றி பிற பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்துகிறோம். இந்தப் பயணத்தில் காலிப் பாட்டிலை லேசாக அமுக்கிப் பார்ப்போம். அது நசுங்கினால் தூக்கிப் போட்டு விடுவோம். கெட்டியாக இருந்தால் அதைப் பாதுகாத்து மறுபடியும் பயன்படுத்தும் பழக்கம் இங்கே தலை விரித்தாடுகிறது.

நெகிழி உறைகள் சுற்றப்பட்டு வரும் உணவுப்பொருட்களான சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப்பொருட்களான, பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது. மேலும் இயற்கையாக வாழை இலை போட்டு உணவருந்தி வந்த மக்கள் தற்போது “கம்ப்யூட்டர் வாழை இலை” என்ற பெயரில் பிளாஸ்டிக் வாழை இலைகளை, பல உணவு விடுதிகளும், வீட்டு விசேசங்களுக்கும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த இலையின் மேல் சூடான திட, திரவ உணவுப் பொருட்களை வைக்கும்போது, வைத்த அந்த இடத்தில் உள்ள நெகிழியானது இளகி, இதில் உள்ள நச்சுப்பொருட்கள் உணவுப்பொருட்களோடு கலந்து, உண்பவருக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

பிளாஸ்டிக்கின் தீமைகள்

· பசு, நாய்,கால்நடைகள்,வனவிலங்குகள்போன்றவைஉணவுடன்(வீணாகும்உணவு)பிளாஸ்டிக்குப்பையைஉட்கொள்வதால்உணவுக் குழாய்அடைப்பாட்டினால்துன்புறவும்,மரணமடையவும்ஏதுவாகிறது.

· வீட்டிலிருந்துதூக்கியெறியப்படும் பிளாஸ்டிக்பொருட்கள்மண்ணின்(உயிர்வேதியியல்)தன்மையைப்பாதிக்கிறது.

· நெகிழிகுடிதண்ணீர்பாட்டில்கள்,குளிர்பானபாட்டில்கள்போன்றவைஎக்காலத்திலும்அழியாது.இவைகள்சாக்கடைகள்போன்றஇடங்களில்அடைத்துகொண்டு பலஇன்னல்களைஏற்படுத்துகின்றன.

· நம் அன்றாடவாழ்வில்தூக்கியெறியப்படும் பிரிக்காதகுப்பைகளினால்கொசுக்களால்பரவும் கொடியநோய்கள்உருவாககாரணமாகிறது.

· பிளாஸ்டிக்உறைகளால்அடைக்கப்பட்டபதப்படுத்தப்பட்ட,உணவுப்பொருட்களால் உடலுக்குபலஊறுவிளைகிறது.

· கடல்,நீர்நிலைகள்,கழிவுச்சாக்கடைகள்போன்றஇடங்களில்

· நெகிழிபைகளால், கழிவுநீரில் தேக்கம்ஏற்பட்டு புதியநோய்கள்பரவவும்,சுகாதாரக் கேடுஉருவாகவும்பிளாஸ்டிக்காரணமாகிறது.

· பிளாஸ்டிக்பைகள் மற்றும்தூக்கி எரியப்பட்டபிளாஸ்டிக்பேக்கேஜிங்பொருட்கள் மழைநீர் ஊடுருவிநிலத்தடிசென்றடையஇடையூறாகஉள்ளது.

· மனிதன்இயற்கையைமறந்துசெயற்கையைதேடல்

· மக்கள்பண்டையகாலங்களில்இருந்து வாழைஇலையில்சாப்பிடுவதும்துணிப்பைகளில்தாம்பூல பைகள்தருவதும்வழக்கமாககொண்டிருந்தார்கள். பித்தளை,சில்வர்போன்றவைகளில்தண்ணீர்சேமித்தல், நீர்அருந்துதல்,போன்றமுறைகளில்இருந்தவர்கள்தற்போதுபிளாஸ்டிக்மோகத்தில்இயற்கை வாழைஇலைக்குபதிலாகபிளாஸ்டிக்இலைகள்,பிளாஸ்டிக்டம்ளர்கள்,பிளாஸ்டிக்கரண்டிகள்போன்றஎண்ணற்றவடிவில்செயற்கையைநாடிச்செல்கின்றனர்.ஆனால்பிளாஸ்டிக்கால்உருவாகும்பொருட்கள்அனைத்தும்வேதிமுறையில்தயாரிக்கப்பட்டவை. இந்தபிளாஸ்டிக்கில்சூடாகவோ,குளிர்ச்சியாகவோ, வெகு நாட்களாகஇருப்பினும்பிளாஸ்டிக்கானதுவேதிவினைபுரிந்து அவற்றைநாம்பயன்படுத்தும்போது நம் உடலில்தேவையற்றகொடியவேதிப்பொருட்கள்சேர்த்து பலநோய்களுக்குகாரணமாவும்,கேன்சர் போன்றவியாதியைஉருவாக்கும்தன்மையையும்கொண்டதாகவும்உள்ளது. மேலும்இது வளரும் நமதுசந்ததியினரையும்வெகுவாகப்பாதிக்கிறது.

பிளாஸ்டிக் வாழ்நாள்

· பிளாஸ்டிக்பைகள் (100-1000 ஆண்டுகள்)

· பஞ்சுக்கழிவுகள் (1-5 மாதங்கள்)

· காகிதம் (2-5மாதங்கள்)

· உல்லன் சாக்ஸ் (1-5ஆண்டுகள்)

· டெட்ராபேக்குகள் (5ஆண்டுகள்)

· தோல் காலணி (25-40ஆண்டுகள்)

· டயபர் நாப்கின் (500-800ஆண்டுகள்)

பிளாஸ்டிக்கை தவிர்த்தல்

· மளிகைப்பொருட்கள், பால்,காய்கறி,துணிக்கடை,மருந்து கடை,மின்னணுசாதனக் கடைகள்போன்றஇடங்களுக்குசெல்லும் போதுதனியரு சேமிப்புதுணிப்பையைவைத்துக் கொள்ளவேண்டும்.

· பதப்படுத்தப்பட்டமற்றும்பிளாஸ்டிக்கில்அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்கவேண்டும்.

· அன்றாடவாழ்வில்உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக்தட்டுகள்,டம்ளர்கள்,பிளாஸ்டிக்கப்புகள் மற்றும்பிளாஸ்டிக் சார்ந்தபொருட்களைதவிர்த்தல்வேண்டும்.

· காப்பர் ஒயர்கள்போன்றவைகளைகண்ட இடத்தில்எரித்தல் கூடாது.

· பிளாஸ்டிக்மறுசுழற்சி மறுபயன்பாடு

· பிளாஸ்டிக்பாட்டில்கள், பேக்கேஜிங் பைகள்,தொழிற்சாலைலைனர்கள்,சுருள்கள்,வணிகக்குப்பைகள்,மளிகைபொருட்கள்அடைக்கப்பட்டபிளாஸ்டிக்பைகள்போன்றவைகளைஉருமாற்றவோ,அழிக்கவோமுடியாது.

· இப்பொருட்களைமீண்டும்மறுசுழற்சிசெய்தல்பயனற்றதாக உள்ளன. ஒருபிளாஸ்டிக்பைகளின் சராசரிபயன்படும் நேரம்வெறும் 20 நிமிடம்மட்டுமே ஆனால்மட்குவதற்குஆகும் காலம்அதிகம்.பிளாஸ்டிக் மற்றும் அதைச்சார்ந்தபொருட்கள்மட்குவதற்கு பலநூறு ஆண்டுகள்ஆகும்.

· கடலில் மிதந்துகொண்டிருக்கும்கழிவுகளில் 90%பிளாஸ்டிக் சார்ந்தபொருட்களேகாணப்படுகின்றன.

· தற்போதுஉற்பத்திசெய்யப்படும்பிளாஸ்டிக்கில்வெறும் 7%மட்டுமேமறுசுழற்சிசெய்யப்படுகிறது.

· அனைத்துவணிகர்களும்,பொதுமக்களும்தனக்கெனபிளாஸ்டிக்தவிர்ப்புமுறைகளைவைத்துக்கொண்டு பிளாஸ்டிக்கைதவிர்க்க முடியும்என்று நம்முடையஎண்ணம்உருவாகவேண்டும்.

· பிளாஸ்டிக்கைதவிர்க்கும் போதுவிவசாய நிலம்,மணல், நீர்நிலைகள்,விலங்கினங்கள்,சுற்றுச்சூழல்மேம்பாடுஅடைதல்,தட்பவெப்பநிலையைசமன்படுத்துதல்போன்றவைகள்மூலம் நம் நாடுதூய்மையாகவும்,பசுமையாகவும்இருக்க உதவும்.

· பிளாஸ்டிக்இல்லாத நாடாகஉருவாக்குவோம்என ஒவ்வொருகுடிமகனும்தனக்கொருஉறுதிமொழியைஏற்படுத்திகொள்ளுதல்

நெகிழிக்கான மாற்று வழி

     நெகிழி - நம் அன்றாட வாழ்க்கையில் ஓர் நாளேனும் இதனை பயன்படுத்தாது இருக்கிறோமா ? இல்லை என்றே  அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு நெகிழி பயன்பாடு நம்மிடையே உள்ளது. விடியற்காலை நெகிழிப் பைகளில் பால் வாங்குவது தொடங்கி,  கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்குவது, புதிய துணிமணிகள், குடிதண்ணீர் பாட்டில்கள், உணவகங்களில் உணவு வாங்கினால், சூடான உணவுப் பொருட்கள், கொதிக்கும் குழம்பு வகைகள் வரை அனைத்துமே நெகிழிப் பைகளில் என்றாகி விட்டது. 

இந்த நெகிழிப் பைகளை பயன்படுத்தி விட்டு என்ன செய்கிறோம் ? குப்பைகளில் தூக்கி எறிந்து விடுகிறோம். அப்படி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் என்னவாகின்றன ? மற்ற பொருட்களைப் போல் மண்ணில் மக்கி அழிந்து போகின்றனவா ? இல்லை. மண்ணுள் அப்படியே தங்கிப் போய்விடுகின்றன. காற்றில் அலைக்கழிக்கப் பட்டு, நீர் நிலைகளில் சென்று சேர்ந்து நீரினையும் மாசு படுத்துகின்றன.

நெகிழிப் பைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப் படும் இரசாயனங்கள் நச்சுத் தன்மை கொண்டவை. நெகிழிப் பைகள் தயாரிக்கப் பயன்படும் ஸைலீன் (Xylene), எத்திலீன் ஆக்சைடு (Ethylene oxide), பென்ஸீன் (Benzene) ஆகிய இரசாயனங்கள், உயிரினங்களுக்கு பல விதமான நோய்களையும் உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த இரசாயங்களால் நீர், நிலம், காற்று என்று நம் வாழ்வுக்கு ஆதாரமான அனைத்துமே பாழ்பட்டுப் போகின்றன.

நெகிழிப் பைகளை அழிப்பதாக எண்ணி அவற்றை எரித்தாலும், புதைத்தாலும் அதனால் விளையும் கேடுகளே அதிகம். எரிக்கையில் வெளியேறும் நச்சு வாயுக்கள் உயிரினங்களின் நலனுக்கு கேடாக அமைகின்றன. நாம் தூக்கி எறியும் நெகிழிப் பைகளின் நிறங்களினால் ஈர்க்கப் பட்டு பறவைகளும் விலங்குகளும் அவற்றை உண்டு விடுகின்றன. கடலில் மற்றும் நீர்நிலைகளில் சென்று சேரும் நெகிழிப் பைகள், நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கு எமனாக அமைகின்றன.

 இது போன்று, ஏதேனும் ஒரு நீர்வாழ் உயிரினம் நெகிழிப் பைகளை அறியாமையால் உட்கொண்டு விட்டால், அதனால் அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். அது எப்படி ? நெகிழிப் பையை உட்கொள்வதால் ஓர் நீர்வாழ் விலங்கினம் முற்றிலுமாக அழிந்து போய் விடும் எனில், உணவுக்காக அந்த உயிரினத்தை சார்ந்திருக்கும் மற்றோர் இனத்திற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். இப்படி ஏற்படுவதால், ஓர் உணவுச் சங்கிலி (food chain) அறுபட்டு விடுகிறது. உணவுச் சங்கிலி அறுபட்டால், ஒரு இனம் அளவிற்கு அதிகமாக பெருகவும், வேறோர் இனம் உணவின்றி அழியும் அபாயமும் ஏற்படுகிறது.


        நமது இந்தியாவில் சாலைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளை அறியாமையால் உணவாகக் கொண்டு விடுகின்றன கால்நடைகள். மாடுகளின் வயிற்றில் இருந்து சுமார் அறுபது கிலோ வரை நெகிழிப் பைகள் எடுக்கப் படுகின்றன. எங்கிருந்து இவை நெகிழிப் பைகளை உட்கொள்கின்றன ? பசும் புல் மற்றும் இலை தழைகள் இல்லாத பட்சத்தில், சாலையோரம் சுவர்களில் ஒட்டப் பட்டிருக்கும் சுவரொட்டிகளை ஆடுகளும் மாடுகளும் உண்பதை  நாளும் கண்கூடாக காண்கிறோம். அப்படிப் பட்ட சூழ்நிலையில், இவை நெகிழிப் பைகளையும் சேர்த்தே உணவாகக் கொண்டு விடுகின்றன. அப்படி அவை உணவாக கொள்ளும் நெகிழி, நம்மை அறியாது நமது உணவுகளிலும் வந்து விடுகின்றன. இப்படி நெகிழி உண்டுவிடும் மாடுகள் தரும் பாலிலும், நெகிழியின் நச்சுத் தன்மை இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இது போன்று நெகிழி உட்கொண்டு விட்ட கால்நடைகளின் மாமிசத்தினை நாமும் உண்ண நேர்ந்தால், அந்த நெகிழியின் தீமைகள் நம்மையும் வந்தடையும்.

            நிலங்கள் மற்றும் காடுகளை  ஆக்கிரமித்திடும்  நெகிழிப் பைகளை  உணவாகக் கொண்டுவிடும் விலங்குகளின் வயிற்றில் அவை அப்படியே தங்கிப் போய், அவற்றிற்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளினால் மூன்று மாதத்திற்கு ஒரு காட்டு விலங்கு வீதம் அழிகின்றன. இந்நிலை தொடர்ந்தால், பூமியில் உள்ள உயிர் இனங்கள் ஒவ்வொன்றாக அழிந்து விடும் பேராபத்தும் இருக்கிறது.

மண்ணிலும் விளைநிலங்களிலும் மண்டிவிடும் நெகிழிப் பைகள் நிலத்தடி நீரோட்டத்தினை பாதிக்கின்றன. மேலும், தாவரங்களின் வேர்கள் நிலத்தினுள் பரவி ஓடை இயலாதவாறு தடை செய்கின்றன. இதனால், செடி கொடிகளின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப் படுகிறது.

நெகிழிப் பைகளால் விழையும் இத்தகைய தீங்குகளில் இருந்து நம்மையும் நமது சுற்றுச் சூழலையும் காத்துக் கொள்வது எங்கனம் ? நெகிழி பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப் பைகளை மீண்டும் பயன்படுத்தலாம். அவை நமக்கு பயன்படாது என்று எண்ணினால், அவற்றை குப்பைகளில் வீசி, அல்லது எரித்து சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாது, அவற்றை மறுசுழற்சி மையங்களில் (Recycling Centers) கொடுத்து விட்டால், அவர்கள் அந்தப் பைகளைக் கொண்டே மீண்டும் புதிய பைகளை உருவாக்கி விடுவார்கள்.

நாம் கடைகளுக்கு செல்கையில் நாமே கைகளில் பைகளை கொண்டு சென்றால், கடைகளில் இருந்து வாங்கி வரும் நெகிழிப் பைகளின் எண்ணிக்கை குறையும். அவை வீணாக குப்பையில் சென்று சேர்வதும் தவிர்க்கப்படும்.

கனடாவிற்கு வந்த புதிதில், ஒரு கடையில் சாமான்கள் வாங்கச் சென்றிருந்த போது, வாங்கிய சாமான்களை போட்டுத் தர நெகிழிப் பை வேண்டுமெனில், அவற்றிற்கு தனியாக கட்டணம் வசூலித்தார்கள். இதனால் அக்கடைக்கு வரும் மக்கள் அனைவருமே தம்முடன் பைகள் வைத்திருந்தனர். இது போன்ற திட்டமும் கூட, நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைக்கும்.

        நெகிழி தண்ணீர் பாட்டில்கள் அழகான பைகளாக உருமாற்றி, நாம் கடைத் தெருக்களுக்கு செல்கையில் பயன்படுத்தும் வகையில் பயனுள்ளதாக மாற்றி விற்பனை செய்கின்றனர். 

பிளாஸ்டிக் உற்பத்தியை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு

           பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு செல்லும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதில் அவற்றை பாட்டிலில் விற்பனை செய்வது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மறு சூழற்சி செய்யும் செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 1ம்தேதி முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி 1ம்தேதியில் இருந்து பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேக்கிங் பிளாஸ்டிக்கும் தடை

        இந்நிலையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகள் 100 சதவீதம் மறு சூழற்சி செய்யக்கூடியவை என்றும் வாதிட்டனர். எனினும் நீதிமன்றம் பிளாஸ்டிக்குக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க மறுத்துவிட்டது.

       பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை கண்டிப்பான முறையில் அமல்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அத்துடன் ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் பால் மட்டுமில்லாமல் ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகள், சாக்லேட்டுகள்  உள்பட பலவற்றுக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்றும் தடைவிதித்தனர்.  

    மறு சுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால் தான் தடையின் நோக்கம் நிறைவேறும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக்குகளுக்கும் தடை விதிக்கவில்லை என்றால் இந்த உத்தரவு வெறும் காதிக உத்தரவாகத்ததான் இருக்க முடியும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

மாநிலஅரசிடமே தடை அதிகாரம்

           சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மட்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக புகார் கூறினர். இந்த வழக்கில் வாதிட்ட தமிழக அரசு 16 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனவும் வாதிட்டது.

           ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் என கூறினர். எனவே 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

                முன்னதாக தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வந்தது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூனில் தமிழக முதல்வர் அறிவித்தார். இதன்படி ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு மாற்றாக 14 வகையான பொருட்களை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தடைக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டது பின்னர் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிளாஸ்டிக் ரோடு போடும்_பிளாஸ்டிக் மேன்

         இந்த பூமியை அழிக்க துடிக்கும் பிளாஸ்டிக் பைகளை வைத்து ஒரு தமிழர் பலவிதமான வித்தைகளை செய்கிறார். யார் அவர் தான் பேராசிரியர்.வாசு தேவன்.தமிழகத்தை இவர் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் உடன் சேர்த்து சாலைகள் அமைப்பது தான் இவர் பணி.கல்லூரி ஆசிரியரான இவர் தனது மாணவர்களை வைத்து பல ஆராய்ச்சிக்கு பின் இந்த சாதனையை செய்திருக்கிறார்.இது பல வருடங்களாக நமது தமிழகத்தில் அமலில் உள்ளது.ஆனால் பலருக்கு இதனை பற்றி தெரியவில்லை. இந்த பதிவை  உங்களுக்கு நான் சொல்ல வருவதற்க்கான தெளிவான காரணம் என்னவென்றால் நெகிழி பொருட்களை குப்பையில் போடும் நாம் அதை நமது சுற்று சுழல் துப்பரவு பணியாளர்களிடம் போய் குடுத்தால் அவர்கள் அதனை சாலை அமைக்க பயன்படுத்தி விடுவார்கள்.

பிளாஸ்டிக் சாலையா அது எப்படி சாத்தியம்:

         சாத்தியமாகாத ஒன்று தான் அறிவியலின் கண்டுபிடிப்பால் சாத்தியம் ஆகிறது. அப்படி என்னதான் வாசு தேவன் செய்து விட்டார் என நீங்கள் கேட்பதற்க்கு முன்னே நான் சொல்லி விடுகிறேன்.

ரோடு போட பயன்படும் சல்லி கற்களின் மீது உருக்கப்பட்ட நெகிழி பையின் கலவையை ஊற்றி அதனோடு சில கற்களை கலக்கும் போது அவை நன்கு வழுமையாக ஒட்டி கொள்ளும் தன்மை பெறுகின்றன.   

பொதுவாக 10 டன் எடை உள்ள தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படுகிறது.அதில் ஒரு டன் தாருக்கு பதிலாக ஒரு டன் பிளாஸ்டிக் உருக்கப்பட்ட கலவை பயன்படுத்தபடுகிறது.ஒரு டன் அப்படிமிச்சப்படுத்தப்பட்டு வருவதால் ரூ .60000 வரை மிச்சப்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் கலந்து போடப்படுகிற சாலைகள் மற்ற சாலைகளை விட அதிக வருடம் உழைக்கிறதென ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.இவை தண்ணிரை தனக்குள்ளே உட்கொள்ளாததால் சாலையின் வாழ்நாள் அதிகரிக்கிறதாம்.

கடந்த  ஆண்டுகளில் சென்னையில்  போடப்பட்ட  500 கிமி சாலைகள் சென்னையில் வெள்ளம் வரும்போது கூட எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையாம்.

நாம் பயன்படுத்து வீசும் சில நெகிழி பைகள்,பல வண்ணங்களில் பேக்கிங்க் செய்து வரும் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள், இவை அனைத்தும் இதொ இப்போது மீண்டும் நமக்கு பயன்படுகிறது.

தமிழகத்தில் முதலில் இந்த திட்டம் அமலான போது அவை இந்தியா முழுதும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்த கண்டுபிடிப்புக்கு அவருக்கு பத்மஸிரி விருதும் கிடைத்திருக்கிறது

இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படித்தினால் நிறைய அழிக்க முடியதா நெகிழிகளை அழிக்க முடியும்.அதற்க்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. மக்கள் குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் குப்பை தொட்டியில் போடுங்கள். பிறகு வீட்டில் சேரும் குப்பைகளை அகற்றி

மக்கும் குப்பை மட்டும் மக்காத குப்பை என பிரித்து அவற்றை ஊரக சுகாதார துறையில் ஒப்படைத்தால் அவை தமிழக அரசு  ரோடு போட பயன்படுத்தி விடுகிறது.நம் சுற்றம் மாற வேண்டும் என ஆசைப்பட்டால் முதலில் நாம் மாறத்துவங்குவோம்.

தமிழகத்தில் நெகிழி தடை-பயன்படுத்த கூடாத பொருட்கள்

       பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மாசுபாடு எனும் பேராபத்தை உலகமே எதிர்கொண்டிருக்கிறது. வளம் நிறைந்த மேற்குலக நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை முறைப்படுத்தவும், பிளாஸ்டிக் மாசில்லா உலகை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

    அந்த வகையில் தமிழகத்திலும் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அறிவிப்பை கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் வேறுபாடின்றி அனைத்துவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வதாக தமிழக அறிவித்தது .இந்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பில் சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்

          வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில் நாற்றாங்காலுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகள்.

  • ஏற்றுமதிக்காக மட்டுமே சிறப்பாக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்.
  • பால் மற்றும் பால் பொருட்களான தயிர், எண்ணெய், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான உறைகள்.
  • இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட மக்கி உரமாகும் தன்மைகொண்ட பிளாஸ்டிக் பைகள்.
  • உற்பத்தி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகள்

தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள்

        தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடையின் அவசியம்

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் நாளொன்றுக்கு 25,940 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். மேலும் இதில் 40% பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.

2016-17 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 79,114 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படாத கழிவுகள் பல்வேறு வகைகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன.

பிளாஸ்டிக் கழிவுகள் மனித இனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக உயிரினங்களுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகள் நிலத்தில் மாசுபாட்டை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நீர் நிலைகளிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    அதன்படி, வாழையிலை, பாக்குமட்டை, காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி மற்றும் காகிதப் பைகள் உள்ளிட்டவை அடங்கிய பாரம்பரிய பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதை ஒரு சில மக்கள் சரியாக பின்பற்றி வருகின்றனர்.அப்படி பின்பற்றாத கடைகளை அரசு கண்காணித்து வருகிறது. மீறி பயன்படுத்துவோருக்கு தக்க அபதாரம் விதிக்கபட்டு வருகிறது.நாளைய நல்ல பூமியை உருவாக்க ஒவ்வொரு தனி மனிதனும் இதில் பங்கு கொள்ளவேண்டியது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

நெகிழியின் மூன்றாம் உலகப்போர்

நெகிழியின் மூன்றாம் உலகப்போர்

         நெகிழி தனியாக இந்த பூமியை விழுங்கி கொண்டிருக்கிறது பல்லாயிரம் வருடம் வாழ்ந்து நம்மை போல பல உயிர்களை வேட்டையாடாமல் விடாது மனிதர்களால் தூக்கியெறியப்படும் குப்பைகள் தான் கடல் குப்பைகளில் பிரதானமானவையாய் இருக்கின்றன. இவை கடலில் மிதக்கின்றன அல்லது அடித்து செல்லப்படுகின்றன. இந்த கடல் குப்பைகளில் எண்பது சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளாகும்.

       இவை இரண்டாம் உலகப் போர் முடிந்த காலத்தில் இருந்து துரிதமாய் பெருகி வருகின்றன. கடல்களில் இருக்கும் பிளாஸ்டிக்கின் அளவு நூறு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகமாய் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் கழிவின் மற்ற வடிவங்களும் கடலில் வந்து கலந்து கடல் உயிரினங்களுக்கும் மீன் வளத்திற்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. 

கடல் உயிர்கள் சுவாசிக்க முடியா திணறல்

             வாழ்விடம் இன்மை, பிராண வாயு பற்றாக்குறை மற்றும் உள்ளருந்தும் உணவு ஆகிய பிரச்சினைகள் காரணமாக நீர்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. பொதுவாக பிளாஸ்டிக்கால் செய்யப்படுகிற மீன் வலைகளை மீனவர்கள் கடலில் விட்டுச் சென்று விடுகின்றனர் அல்லது தொலைத்து விடுகின்றனர்.

      இவற்றுக்குள் மீன்கள், டால்பின்கள், கடல் ஆமைகள், சுறாக்கள், கடல்பசுக்கள், முதலைகள், கடல்பறவைகள், நண்டுகள் மற்றும் மற்ற உயிரினங்கள் மாட்டிக் கொண்டு விடுகின்றன. இதில் அந்த உயிரினங்களின் இயல்பான இயக்கம் பாதிக்கப்பட்டு அவை பட்டினியாலும் தொற்றுகளாலும் அவதியுறுகின்றன. சுவாசிக்க மேற்பரப்புக்கு வர வேண்டிய அவசியத்தில் இருக்கும் உயிரினங்கள் மூச்சுத் திணறுகின்றன.

நெகிழியை உணவென உண்ணும் மீன்கள்

நெகிழியை உணவென உண்ணும் மீன்கள்

        பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற பொருட்களை போல் உயிரியல் சிதைவுறுவதில்லை என்பதால் அவை குவிந்து கொண்டே செல்கின்றன. சூரிய வெப்பத்தில் அவை ஒளிச்சிதைவுறலாம், ஆனால் உலர்ந்த சூழ்நிலையில் மட்டுமே அவ்வாறு நிகழ முடியும். நீர் இந்த நிகழ்முறையைத் தடுத்து விடுகிறது.நீடித்து தங்கி விடக் கூடி இவற்றில் பலவும் கடல் ஆமைகள், மற்றும் கருங்கால் ஆல்பட்ராஸ் ஆகிய கடல்வாழ் பறவைகள் மற்றும் விலங்குகளின் வயிற்றுக்குள் சென்று விடும்.

          பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நச்சு சேர்க்கைகளில் தண்ணீர் படும்போது அவற்றின் சுற்றுப்புறங்களும் மாசுபடக்கூடும். நீரிலிருக்கும் மாசுபாடுகள் சேதாரமாகி  பிளாஸ்டிக் குப்பைகளின் மேற்பரப்பில் படிகின்றன. இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் இருப்பதை விடவும் கடலில் இன்னும் அபாயம் விளைவிப்பதாய் ஆகி விடுகின்றன. இந்த நீர்வழி மாசுபாடுகள் கொழுப்பு திசுக்களில் உயிரியல் ரீதியாய் பெருகும் குணம் கொண்டவை. அத்துடன் உணவுச் சங்கிலியை உயிரியல் அளவுப்பெருக்கமுறச் செய்து தலைமை வேட்டைவிலங்குகளுக்கு நெருக்குதல் அளிக்கும். சில பிளாஸ்டிக் சேர்க்கைகள் உட்சுரப்பு அமைப்பை பாதிக்கும் தன்மை கொண்டவை. இன்னும் சில நோயெதிர்ப்பு அமைப்பை பாதிக்கலாம் அல்லது இனப்பெருக்க விகிதங்களைக் குறைக்கலாம்.கடல்நீரில் இருக்கக் கூடிய மற்ற கரிம மாசுபாடுகளையும் மிதவைக் குப்பைகள் உறிஞ்சிக் கொள்ளக் கூடும்.

             இப்படி பட்ட கொடிய பிளாஸ்டிக்கை தான் நாம் பந்தாவிற்கு சுமந்து செல்கிறோம். அடுத்த கட்ட உலக போர் இந்த பூமியில் நடக்குமாயின் அது சோற்றுக்குதான். ஆம் அதற்கு முன்னாடியே நெகிழி அதற்கான வேலையில் ஆயுத்தமாகிவிட்டது.முடிந்த வரை நெகிழியை தவிர்ப்போம். நம் வாழ்வை காப்போம்.